#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 #🌌மஹாசிவராத்திரி ஜோதிட பரிகாரங்கள்🔮 மஹாசிவராத்திரி நாளில் குலதெய்வத்தை வழிபடும் அன்பர்களுக்காக இந்த பதிவு!
குல தெய்வத்தை வசியப்படுத்தி,குல தெய்வத்தின்
முழு அருளையும் பெற்று நல்வாழ்க்கை வாழ்வது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது மஸ்டர்டு மலர் மருந்து எடுத்து கொண்டால் குல தெய்வத்தின் ஆசிகள் எளிதாக கிடைக்கும்.
கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர குலதெய்வங்கள் வசியம் ஆகும்.
ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங்
ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம்
பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் )
சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .
குல தெய்வம் வசியம் செய்ய பெண் தெய்வங்களாக இருக்கும் போது செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை உகந்தது.
ஆண் தெய்வமாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழகிழமை உகந்தது.
இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி
நல்ல வாழ்க்கை அமையும்
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.
அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.
அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.
இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.
மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.
மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
குலதெய்வமே தெரியாமல்
பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.
குலதெய்வம் தெரியாமல்
எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே எப்பாடு பட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வர வேண்டும்.
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.
குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.
இன்று மகா சிவராத்திரி நாளில் ஜெபிக்க வேண்டிய சிவ மந்திரம்
ஜயதே ஜகந்நாத ஜயசங்கர சாத்வத
ஜயசர்வ ஜகந்நாத ஜயசங்கர சாத்வத
ஜயசர்வ ஸாரா ராதய ஜயசர்வ ஸீரார்ஸீத
ஜயநித்ய நிராதார ஜயவிச்யம் பர அவ்வய
ஜயவிக்ன வகவந்தயே ச ஜய நாகேந்து பூஷன
ஜய கெளரிபதே சம்போ ஜய நித்ய நிரஞ்சன
ஜயநாத க்ருபா ஸிந்தோ ஜய பத்தார்த்தி பஞ்சனி
ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகார உத்தாரண ப்ரபோ
இந்த மந்திரத்தை நித்யபிரதோஷ காலத்தில் சிவன் ஆலயத்தில் கூறிவந்தால்
நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் அங்கே வரும்
அன்றுமுதல் குடும்பம் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட ஆரம்பிக்கும்.
இதை கோயிலில் அமர்ந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சாமி பார்க்க வரிசையில் நிற்க்கும் போது சொல்லிக் கொண்டே போகலாம்
குலதெய்வம் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள், குலதெய்வத்தை வழிபட இயலாதவர்கள் இவர்களுக்கு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று.
குலதெய்வம் தெரிந்தவர்கள் அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.
குலதெய்வம் அருள் கிடைக்க உதவும் மந்திரம்:
*ரோகாச் சோகாச் ச* *தாரித்ர்யம்*
*தெளர்பல்யம் சித்தவிக்ரியா*
*நச்யந்து குலதேவஸ்ய சக்தி* *மந்த்ரேண தாடிதா*:
இதன் பொருள்:
பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பங்காளிகள்,உறவினர்கள்
நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பலனடைய உதவுங்களேன்!✍🏼🌹