Rationalist
512 views
"ராமர் கோவிலில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியில் இடம்பெற்றிருக்கும் முத்திரை என்ன?" "தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கடவுளின் பெயர் என்ன?" கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்த NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை. இத்தேர்வுக்கு சென்றிருந்த தோழர் ஒருவர்தான் இத்தகவலை சொன்னார். கூடுதலாக இத்தேர்வுக்கென ஒதுக்கப்பட்ட தேர்விடம் மிகக் கொடுமையான தேர்விடம். வானகரம் அருகே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நடந்த தேர்வுக்கு காலை 8 மணிக்கே செல்ல வேண்டும். மாலை 4 மணி வரை தேர்வு. காற்று வசதி கூட இல்லாத அளவுக்கான ஒரு குடோன் போன்ற இடத்தில் தேர்வு. போதுமான அளவுக்கு குடிநீர் கூட இல்லை. தேர்வு முடிந்த வெளியில் வந்த தோழர் வாந்தி எடுக்குமளவுக்கு புழுக்கம் நிறைந்த ஒரு கொடும் கூடத்தில் தேர்வு நடந்திருக்கிறது. ஏற்கனவே 2016-ல், பாஜக ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் NIFT தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவை சேர்ந்தவருமான சேத்தன் செள்ஹானை நியமித்தது. பேஷன் கல்வி மட்டுமின்றி கல்வித்துறைக்குமே கூட சம்பந்தமற்ற ஒருவரை NIFT-க்கு தலைவராக பாஜக நியமித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரும் அதற்கேற்றார்போல 20% மட்டும்தான் NIFT-க்கு பணிபுரிவேன் என திருவாய் மலர்ந்தார். கடந்த 2022-ல் சென்னை NIFT தலைவர் அனிதா மீது தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட சம்பவம் நடந்தது. NIFT-ல் அனுமதிக்கப்படுவதற்கு என Domicile என ஒரு பிரிவை வைத்திருக்கின்றனர். State Domicile பிரிவில், சொந்த மாநிலத்திலுள்ள NIFT நிறுவனத்தில் இடம்பெறும் வாய்ப்பை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர் பெற முடியும். ஆச்சரியகரமாக பெரும்பாலான மாநிலங்களுக்கு இருக்கும் இந்த State Domicile பிரிவு, தமிழ்நாட்டுக்கு இல்லை. அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும். அது தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடாக இல்லாமல் போகும் வாய்ப்புகளே மிக மிக அதிகம். இதற்கு நேரடி அர்த்தம், சென்னை NIFT-ல் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான். இன்னும் தெளிவாக சொல்வதெனில் தமிழ் மண்ணுக்குரிய Fashion என்பது, இந்திய Fashion கல்வியில் இருக்காது. இருந்தாலும் அது பார்ப்பனிய fashion ஆக இருக்கும். பொதுவாகவே ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்திய தேசிய திணிப்பும் தமிழ் மற்றும் தமிழ்நாடு மீதான பாரபட்சமும் காட்டப்படும் நிலை இருக்கும். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு கூடுதலாக காவி திணிப்பும் நடந்தேறி வருகிறது. காவி திணிப்பு என்பது இட ஒதுக்கீடு மறுப்பு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறை, பார்ப்பனிய சிந்தை, சாதிய அடுக்குமுறை, சிறுபான்மையினர் வெறுப்பு, தென்னிந்தியா-தமிழ்நாடு மீதான வன்மம் என்பதை அறிக! #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴