மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மொத்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது...
21 வயதான ஒரு இளம்பெண் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கடுமையான அசிடிட்டி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போவதை உணர்ந்துள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண செரிமானப் பிரச்சினை என்று குடும்பத்தினர் நினைத்த நிலையில், அவரது நிலைமை மிக விரைவாக மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் போன்ற சாதாரண அறிகுறியாகத் தெரிந்தது எப்படி ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றது என்பது குறித்த அச்சமும் விவாதமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண் மிகவும் இளம் வயதினர் என்பதால், கிராம மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். நமது உடல் கொடுக்கும் சிறிய அறிகுறிகளைக் கூட அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியத்தை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
#📰ஏப்ரல் 6 முக்கிய தகவல் 📺