பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
1K views
ஸ்ரீ (969) #ஆண்டாள் திருப்பாவை வேதமனைத்திற்கும் வித்து. பசுக்களுடன் கன்றுகளும் சேர்ந்திருக்க அப்பசுக்களின் பாலைக் கறந்து , பகைவர்களுடைய ஆற்றலை அழிக்கும் படி , இவர்களே சென்று போரிடும் ஒருவகைக் குற்றமும் இல்லாத இடையர்களின் அழகிய கொடி போன்றவளே ! பாம்புப் படம் போன்ற அல்குலைக் கொண்டு, மயில் போன்ற சாயல் உடையவளே! *கண்ணபிரானின்* ஆசை பெண்ணே! எழுந்து வருக! உன் முன் வாசலிலே உறவு முறை கொண்ட தோழிகள் அனைவரும் கூடி, மேக நிறக் *கண்ணனின்* திருநாமங்களை பாடிட, நீயும் அதனைக் கேட்டும் அசையாமலும் மறுமொழி கூறாமலும் உறங்கிக் கொண்டிருப்பது எதற்காக ? ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஶரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏