S.ANTHONY✝️YESUMARY
5.1K views
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹* *என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்.* *என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.* *உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.* *ஆண்டவரே; உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!* *ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது.* (திருப்பாடல்கள் 40:8-12) *✝️ஜெபிப்போமாக :🛐* *என் ஆண்டவரே! என் கடவுளே! உம்மை போற்றுகிறோம். நீரே எங்கள் கடவுள். உம்மையன்றி எங்களுக்கு வேறு தெய்வம் இல்லை. உமது மகனையன்றி எங்களுக்கு வேறு மீட்பர் இல்லை. தூய ஆவியார்தான் எங்களை வழிநடத்தும் தெய்வம். மூவொரு தெய்வமே உம்மை ஆராதிக்கின்றோம்.* *அன்பான தந்தையே! இந்த பொல்லாத உலகில், எங்களை ஒவ்வொரு நாளும் காத்து, வழிநடத்தி வருவதற்காக உம்மை பணிந்து, வணங்கி நன்றி கூறுகின்றோம் அப்பா!* *அப்பா! எங்களை மயக்கும் உலக ஆசைகள், எங்களை பாவத்திற்கு இட்டுச்செல்லும் எங்கள் உடல் ஆசைகள், எங்களை நரகத்திற்கு கூட்டி செல்ல துடிக்கும் சாத்தான் இந்த மூன்றிலிருந்தும் எங்களை காப்பாற்றும்படியாக‌ உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம் அப்பா.* *ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் எத்தனையோ வழிதவறி சென்ற ஆன்மாக்கள், மீண்டும் உம்மிடம் வருவதற்கு ஏங்கிகொண்டு, தவித்துக்கொண்டு இருக்கிறது. அவர்களோடு சாத்தான் போராடுகிறான், அவர்களுக்கு துன்பத்தை கொடுக்கிறான் அல்லது ஆசைகளை காட்டி தவறான பாதையை நோக்கி இழுக்கின்றான். ஆண்டவரே, இவ்வான்மாக்கள் மீண்டு வர வேண்டும் எனில் உமது இரக்கம் தேவை, உமது கருணை அவர்களுக்கு தேவை, உமது மன்னிப்பு அவர்களுக்கு தேவை, உமது அன்பு அனைவருக்கும் தேவை அப்பா.* *அன்பான தந்தையே! எங்களுக்கு உமது மன்னிப்பை தாரும், உமது அன்பை தாரும், உமது அரவணைப்பைத் தாரும். உமது கனிவை எங்களுக்கு கற்றுத் தாரும், உமது இரக்கத்தை எங்கள் மீது பொழிந்தருளும், உமது கருணையால் எங்களை காத்தருளும்.* *இவ்வாறு நாங்கள், உமது பார்வையில் இருந்து ஒருபோதும் விலகாமல் வாழ்ந்து, பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று, ஒளியின் மக்களாக இவ்வுலகில் வாழ எங்களுக்கு உதவி செய்தருளும்.* *ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்