பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
2.7K views
12 days ago
ஸ்ரீ (969)அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்… ஹே பகவானே! காக்கும் ஸாமர்த்தியம் படைத்த உன்னை அடைக்கலம் புகுவது, நான் சோர்வடையும் பொழுது நீ துணை நிற்பாய் என்ற காரணத்தால் அன்றோ? அப்படி காக்கப்படுவதற்கு நான் தகுதி அற்றவனாக இருந்தாலும், அன்று நீ கஜேந்திரன் என்ற யானையைக் காத்தபடியால், என்னையும் காக்கவேண்டும். உன்னை சரணம் அடைகிறேன். கடைசி காலத்தில் நோய் வந்து அடியேனை வருத்தும்பொழுது, என்னால் உன்னை ஒரு நொடியேனும் நினைக்க இயலாது. அதை மனதில் கொண்டு, நான் பிரக்ஞையுடன் இருக்கும் இப்பொழுதே, உன்னிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் சயனித்திருப்பவனே! என்னைக் காத்தருளவேணும்! ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே ஸராணம். #பெருமாள்