நஜிராஅமான்
642 views
17 days ago
சாதி வெறி கலவரத்தை கண்டு கொள்ளாத காரைக்கால் மாவட்ட நிர்வாகம் காரைக்கால் மாவட்டம் நிரவிகொம்யூன் ஊழியப்பத்து தலித் கிராமம் காளியம்மன்கோயில் தெரு சாமி ஊர்வலம் மெயின் ரோட்டில் வரக்கூடாது என ஊழியபத்து பகுதியை சேர்ந்த சாதி வெறியர்கள் தலித் கிராமத்தினரை மறித்து கலவரத்தில் ஈடுபட்டனர் இதே பிரச்சனை கடந்த ஆண்டும் சாதி வெறியர்களால் தூண்டி விடப்பட்டு பொதுமக்களுக்கு சொந்தமான அரசால் போடப்பட்ட சாலையை பட்டியல் சமூகத்தினரின் சாமி புறப்பாடு சென்றதால் அப்பகுதியை சேர்ந்த சாதி வெறியர்கள் தலித்கிராமத்தினரை மறித்தும் சாமி ஊர்வலத்தை மறித்தும் சாலையில் மது பாட்டில்களை காவல் துறை முன்னே போட்டு உடைத்தனர் காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி கலவரத்தை தூண்டிவிடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக காவல்துறை கைது செய்திருக்க வேண்டும் ஆனால் கைது செய்யவில்லை சாதி வெறியர்கள் சாதியை சார்ந்த அரசு அதிகாரிகள் கலகக்காரர்களை எச்சரிக்கை கூட செய்யவில்லை இதுபோல் தலித் மக்கள் பொது பாதை செல்லும் நபரையோ அல்லது சாமி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிக்கோ இடையூறுகள் செய்திருந்தால் மாவட்ட நிர்வாகம் இப்படி கைகட்டி வேடிக்கை பார்க்கும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இது போன்ற பொது அமைதியை கெடுத்து கலவரத்தில் ஈடுபடும் நபர்களை இப்படித்தான் காவல்துறை கையாளுமா பொதுப்பாதையில் சாராயம் கடத்த அனுமதிக்கும் சாதி வெறியர்கள் திருட்டு மணல் கடத்த அனுமதிக்கும் சாதி வெறியர்கள் சட்ட விரோத செயலுக்கு அனுமதிக்கும் சாதி வெறியர்கள் இந்து கடவுளை அனுமதிக்க தடுப்பது ஏன் சாமிக்குள் பாகுபாடு இல்லை நமக்குள் ஏன் இந்த பாகுபாடு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் காவல்துறையின் தலித் மக்களுக்கு எதிராக இந்த சாதியை போக்கை கண்டித்தும் பொதுப் பாதையை வழி மறைத்தும் மது பாட்டில்களை உடைத்தும் காவல்துறை கழகம் செய்ய திட்டமிட்ட சாதி வெறிகளை கண்டு கொள்ளாதது ஏன் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை காவல்துறை கைது செய்யுமா #செய்தி