இந்த மஹாசிவராத்திரியில் இருந்து உங்கள் வாழ்க்கை மேன்பட .. இதை செய்து பாருங்கள் !!
இன்று முழுவதும் முடிந்த அளவுக்கு !!
சிவநாமத்தை உங்கள் உள்ளூர ஜெபித்து கொண்டே இருங்கள் !!
எதை செய்தாலும் சிவநாமம் உங்கள் உள்ளூர ஜெபிப்பதை விட்டு விடாதீர்கள் !!
அதேபோல இன்றைய இரவு ஓர் அற்புதம் நிகழ்வுக்கும் நிகழ்வு நடக்கும் !!
அதை ஆழ்ந்து உள்வாங்குபவர்கள் !!
தங்களுடைய நிலையில் ஓர் நல்ல மேன்மையை அடைவார்கள் என்பது சாத்தியமாகும் !!
அதாவது
இன்று இரவு 12 மணிக்கு மேலே !!
முக்கியமாக 2.30 முதல் 3.30 வரையான காலத்தில் ..
உங்களை தூய்மை படுத்திகொண்டு ( முடிந்தால் குளித்து விட்டு )
திருநீறு தரித்து கொண்டு
ஏதோவொரு சிவாலயம் சென்று !!
அங்கே கூட்டத்தில் சிக்கி கொள்ளாதே தனியாக அமர்ந்து !!
ஆழ்ந்து மூச்சை இழுத்து !!
சிவநாமம் சொல்லியபடியே. மெதுவாக அந்த மூச்சை வெளியே விட்டபடி இருங்கள் !!
அந்த நேரத்தில்
இந்த பிரபஞ்சத்தையே இயக்கி ஆளும் மூலமான இறைப்பேராற்றல் !!
இந்த பூமியை தன் முழுஆற்றலை கொண்டு ஆக்கிரமித்து !!
இந்த பூமியையும் !! அதில் உள்ள அனைத்திலும் அந்த பேராற்றல் ஊடுருவி !!
ஒவ்வொரு அணுவையும் அதன் சர்வ வல்லமையோடு இயக்கும் நேரம் ஆகும் !!
அதை முழுமையாக உணர்ந்து உள்வாங்கி கொள்பவர்கள் !!
தங்கள் வாழ்வின் மேன்மையை , தங்களின் இருந்து வெளிப்படும் ஆற்றலையும் மேன்படுத்தி கொள்வார்கள் !!
அதை முழுமையாக உள்வாங்க !!
உங்கள் வயிறை காலியாக வைத்துக்கொள்ளுங்கள் !! வயிற்றில் உணவு இருக்கும்போது !! உடல் அதை செரிக்க செய்யும் பணியை தான் செய்யும் !! இவ்வாறு வரும் ஆற்றலை முழுமையாக உள்வாங்காது என்பதால் !!
மேற்கூறியபடி ஆலயம் என்பது இப்பிரபஞ்ச ஆற்றலை கூட்டிவிக்கும் இடமாகும் என்பதால் !!
அங்கே அமர்ந்து
சுவாசத்தில் அந்த நேரம் வெளிப்படும் ஆற்றலை உள்வாங்கி !!
சிவநாமம் என்ற அதிர்வலையை கூட்டும் மந்திரம் சொல்லி !! உள்வாங்கிய ஆற்றலை அம்மந்திரத்தோடு கலந்து !!
அந்த சுவாசத்தையும் உடனே வெளியே விடாதே !! பொறுமையாக வெளியிடும் போது !!
அந்த ஆற்றலை உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் முடிந்த அளவுக்கு கிரகித்து கொள்ளும் !!
அப்படி ஓர் அணுவில் தொடங்கி !!
உங்கள் உடலில் உள்ள கோடானகோடி அணுக்கள் அந்த ஆற்றலை ஆழ்ந்து கிரகித்து உங்கள் உடல் முழுவதும் !!
அந்த ஆற்றலின் ஆளுமையில் ( சிவம் என்ற பிரபஞ்ச பேராற்றல் ஆளுமையில் ) ..
நம் ஆன்ம இப்பிரபஞ்ச பேராற்றலுடன் ஓர் புணர்ச்சி போல கலந்து !!
அதில் நான் என்ற ஆணவத்தன்மை இழந்து !!
சிவமே உங்களை முழுமையாக ஆண்டு !!
உங்களுள் அதன் தன்மையை ஆழ்ந்து பதிந்து !!
உங்களிடம் இருந்து
நீக்க வேண்டியதை நீக்கி !!
பெருக்க வேண்டியதை பெருக்கி !!
இருக்கவேண்டியதை இருத்தி !!
ஈர்க்க வேண்டியதை ஈர்த்து !!
உங்களுள் இருக்கும் சோம்பேறித்தனம் !! தள்ளிப்போடும் குணம் !! பிறர் குற்றம் காணும் தன்மை !! போன்றவை நீங்க !!
உங்கள் உடல் !! மனதில் !! புதிய உத்வேகம் , திறன் மேம்பாடு , அணுகும் முறை , செயல்படுத்தும் விதம் போன்றவை பெருகி !!
உங்களிடம் அன்பு , கருணை , நிதானம் , பொறுமை , ஏற்றுக்கொள்ளும் பரிவு போன்றவை இருத்தி !!
உங்களை உட்புகுந்து மேன்படுத்தும் அற்புத இரவே இன்றைய இரவு ஆகும் !!
அப்படியெல்லாம் நடக்குமா ?? என்ற சந்தேகம் வருவது நம் இயல்பு தான் ..
கொஞ்சம் செய்துதான் பாருங்களேன் !!
உங்களுள் ஏதோ ஓர் ஆழ்ந்த அமைதி !!
வெளியே சொல்ல வார்த்தைகள் அற்ற ஆனந்தம் !! உங்களை ஆட்கொள்வதை உணருவீர்கள் ..
அதற்க்கு அடுத்த நாளில் இருந்து !!
நீங்களே உங்களிடம் வியக்கும்படியான மாற்றம் நிகழ்வதை உணருவீர்கள் !!
நீங்கள் மாற்றிவிட்டால் மாற்றம் ஏற்றம் தானே உங்கள் வாழ்வில் !!
வாழ்த்துகள்
அப்படி அவன் உணர்த்தி , அவ்வாறு அவனோடு , அவனால் இருந்து , அனுபவித்ததின் பயனே இவனது வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றது !!
அதை நீங்களும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று அவனே என்னுள் உணர்வித்த கருணையால் இப்பதிவு !!
திருச்சிற்றம்பலம்
#🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔥 ருத்ராபிஷேகம்🕉️ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐