Newschannel39
532 views
ஆர்.கே.நகரில் புரட்சித்தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 கிறிஸ்துவ சபை ஊழியர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்! சென்னை, பிப். 08: முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, ஆர்.கே.நகர் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை மற்றும் புதுவண்ணாரப்பேட்டை பிரஸ் குவாட்டர்ஸ் பகுதியில் உள்ள கிறிஸ்துவ திருச்சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகம் செழிக்கவும், கழகம் மேலோங்கவும் வேண்டி சபையினருடன் இணைந்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, திருச்சபையைச் சேர்ந்த 350 ஊழிய குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘அன்பு பெட்டகத்தை’ மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ். ராஜேஷ், "ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே வாழ்ந்தவர் அம்மா அவர்கள். அவரது வழியில் மக்கள் பணியாற்றும் அண்ணா தி.மு.க-வுக்கு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் ஆதரவளித்து, மீண்டும் ஒரு நல்லாட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் எம்.என். சீனிவாசபாலாஜி, சந்தனசிவா, எல்.எஸ். மகேஷ்குமார், வி.எஸ்.புருஷோத்தமன், சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி, கே.பி.கர்ணன், லிங்கேசன், எல்.விஜி, எம். ஜெய்சங்கர், மதிசீனிவாசன், வினோத், வீரா, சதீஷ் பரணி, நிர்மல், இளவரசன், டி.பிரபாகரன், நிர்மல்குமார், வக்கீல் சரவணகுமார், புலிமுருகன், பி.எம். குட்டி, மெக்கானிக் செல்வம், ஜீவிதா, உமாதேவி, பலர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம்