arukanimembers
532 views
1 days ago
சிற்றாறு - 2 அணையின் அவலநிலை! நடவடிக்கை எடுக்கபடுமா? கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை அருகே சிற்றாறு 2 அணை கடந்த பல வருடங்களாக பராமரிப்பு இன்றி முள் புதர் பிடித்து, சுகாதார மின்றி, குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அழகிய கண்களை கவரும் வண்ணம் அழகாக அமைந்திருந்த அணை தற்போது அழகு குன்றி காணப்படுகிறது. அதுபோல முள் புதர்களுக்குள் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகளுக்கு உறைவிடமாக மாறியுள்ளது. மேலும் அணை திறக்கப்படாததால் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் முள் புதர்களையும், குப்பைகளையும் கண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது பணி துறை அதிகாரிகள் புதர்களை மற்றும் குப்பைகளை அகற்றி அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்