sakthi m
637 views
#🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 ஒரு யானையைத் விழுங்குவது எப்படி? "How to eat an elephant? Bite by bite..." – என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆலமரம் போல் தழைத்தோங்கிய ஒரு இயக்கத்தை வீழ்த்த வேண்டுமானால், அதை முதலில் சிறு சிறு துண்டுகளாக உடைக்க வேண்டும் என்பதுதான் அதிகார அரசியலின் வியூகம். இன்று அதிமுக-வின் நிலை தெரிந்ததே! நேரடியாக மோத முடியாத ஒரு பெரிய சக்தியை கபளீகரம் செய்ய, முதலில் அதை கடித்து விழுங்கும் அளவிற்குச் சிறிய துண்டுகளாக்க வேண்டும். அதன்படியே, அதிமுக இன்று நான்கு துருவங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சசிகலா மற்றும், டிடிவி தினகரன். இந்த நால்வரின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த இயக்கத்தை முழுமையாக விழுங்குவது சாத்தியமில்லை. "உன் பங்காளியை வீழ்த்த எனக்கு உதவி செய்" என்று மற்ற மூவரிடமும் தனித்தனியாகப் பேசி, ஒட்டுமொத்தக் கதையையும் முடிப்பதுதான் அம்சாவின் 'சாணக்கியத்தனம்'. ஏற்கனவே இரு தரப்பினர் (1,4) மிரட்டல் மற்றும் சமரச அரசியலுக்குப் பணிந்து கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். மீதமுள்ளவர்களும் (3)வரும் பிப்ரவரி 24-ம் தேதியும், 4 விரைவில் புதிய கட்சி தொடங்குவது போன்ற நகர்வுகளின் மூலம் மாறுவேடத்தில் களமிறக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் மறைமுகமாக ஒரே புள்ளியில் (NDA கூட்டணி) இணைக்கப்பட்டிருப்பவர்களே! தென் தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் 'இரட்டை இலை' அல்லது அதன் ஆதரவுடன் வென்றுவிட்டு, ஒரு கட்டத்தில் அம்சா கண்ணசைக்கும் நாளில் அதே சின்னத்தை மிதித்துவிட்டு எடப்பாடிக்கு எதிராக வெளியேறும் 'சங்கூதும்' படலம் விரைவில் அரங்கேறும். இது வெறும் கணிப்பல்ல, அரசியல் சதுரங்கத்தின் அடுத்தடுத்த நகர்வுகள். இது நடக்காவிட்டால் நான் அரசியலைப் பற்றி எழுதுவதையே விட்டுவிடுகிறேன் (Screen Shot எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்). சசிகலா அவர்கள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி பசும்பொன்னில் புதிய கட்சி மற்றும் கொடியை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "பரப்பன ஆக்கிரகாரத்து பாசப்பறவைகள் கட்சி" போல ஏதாவது ஒரு நல்ல பெயர் சொல்லிட்டு போங்க....