♦️♦️விநாயகர் துதி
🔹அருகம்புல் சந்தனகாப்பு அலங்காரத்தில் தரிசிக்கிறேன் பாலவிநாயகா,
🔹அதி சுந்தர அலங்காரத்தில் அதிகாலையில் உனை கண்டேன்,
🔹அதிக ஆனந்த பிரவாகத்தில் நான் மகிழ்ந்து மெய்சிலிர்த்து நின்றேன்,
🔹அதிசயமாக ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் மென்மையாக வந்து எனை திகைக்க வைத்தாய்,
🔹அதிர்ஷ்டம் நான் என்ன செய்தேனோ நீ என்மேல் பொழியும் அருளை நினைக்கையில்,
🔹அசையாது அமைதியாக ஆடாது அமர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்துகிறாய்,
🔹அண்ட சராசாரங்கள் யாவற்றிலும் ஆதி பகவானாக துதித்து போற்றப்படுகிறாய்,
🔹அருகம்புல் அணிவித்து அதீத பக்தி பெருக்கோடு சந்தனகாப்பு அலங்காரத்தில் தரிசிக்கிறேன்,
🔹அருமை மகனாக எனக்கு உன் பாதாரவிதங்களில் அடைக்கலம் தந்திடுவாய் பாலவிநாயகா..
🌹விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி....
🌹30.03.2026.. நேசமுடன் விஜயராகவன்...
#✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️சதுர்த்தி விரதம் #🔍ஜோதிட உலகம் 🌍