இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான் ஆனால் அவ்வளவு எளிதான வெற்றியா என்று கேட்டால் கிடையாது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
இந்த இலங்கை மைதானத்தில் பாகிஸ்தான் அணி வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்து பழகியது ஆனால் மீதமுள்ள 18 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வைத்து ரொட்டேட் செய்தது
அதையும் சிறப்பாக தடுத்து ஆடி இந்திய அணி ஒரு 175 ரன்கள் குவித்தது ஆனால் அந்த ஸ்பின்னிலும் தரமாக வீசினார்கள் சில பந்துகள் எதிர்பார்த்ததை விட அபாயமாக திரும்பியது இதனால் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியதை காண முடிந்து இப்படி இருக்க
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீசும் போது இதே போல் இருக்குமா என்று நாம் எதிர்பார்த்தோம் ஆனால் பந்து திரும்ப அவ்வளவு உதவவில்லை மாறாக பேட்டிக்கு சுலபமாக செல்வது போன்று தான் இருந்தது
இருப்பினும் இந்தியாவின் திறமை அங்கேதான் வெளிப்பட்டது குறிப்பாக வருண் சக்கரவர்த்தி பந்துகளை அவர்கள் முதல் ஓவரில் எப்படி பார்த்து பார்த்து ஆடினார்கள் என்பது நன்றாக தெரிந்தது. வெறும் நான்கு ரண்களை மட்டுமே அவர் முதல் ஓவரில் விட்டுக் கொடுத்தார்
அதேபோல்தான் அக்ச்சர் பட்டேலும் பந்து திரும்பவில்லை என்றாலும் பாபர் ஆசமின் விக்கெட்டை ஒரு ஸ்ட்ரெய்ட் பந்திருக்கு இரையாக்கியது அவ்வளவு எளிதல்ல திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்துவதை விட அந்த திறமைக்கு நாம் விரல்கள் தான் காரணம் அந்த விரலில் நுனியில் இருந்து பந்துகளை சுழற்றி அனுப்புவது அவ்வளவு எளிதல்ல என்பதை இன்றைய ஆட்டத்தில் இந்திய ஸ்பின்னர்கள் அருமையாக நமக்கு செய்து காட்டினார்கள்
குல்தீப் யாதவ் வருண் சக்கரவர்த்தி அக்சர் பட்டேல் மற்றும் திலக் வர்மா என்று சூழல் பந்து வீச்சு இந்தியாவிற்கு அருமையாக கை கொடுத்தது
சொல்ல போனால் முதல் இன்னிங்ஸில் பந்து திரும்பியதை விட பாதி அளவுக்கு தான் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு பந்து திரும்பியது இருப்பினும் இந்தியா பாகிஸ்தானை 114 ரன்களுக்குள்ளேயே சுருட்டி விட்டது இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் அசுரத்தனமான அபாரமான திறமை தான்
இந்தியா வின் சுழல் உலகத்தரம் 🥵🔥
#varunchakaravarthy #kuldeepyadav #AxarPatel #tilakvarma #hardikpandya
#🏏 கிரிக்கெட்