arukanimembers
463 views
*இறப்பிலும் இணை பிரியாத தம்பதி* 40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கணவன் மனைவி. இறப்பிலும் இருவரும் இணைந்த தம்பதியினர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த கருணாகரன்(79) நகராட்சி ஊழியராக பணியாற்றி வந்த இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பணக்காடு பகுதியை சேர்ந்த ஓமனா (74) என்பவரை திருமணம் செய்து கண்ணக்கோடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் 52 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் ஓமனா புற்றுநோய் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஓமனா உயிர் இழந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து ஓமனா உடலை கண்ணக்கோடு வீட்டிற்கு கொண்டுவந்து சற்று நேரத்தில் கருணாகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரும் உயிர் இழந்தார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்