arukanimembers
515 views
கும்பிச்சல் கடவு பாலம்: கேரளா முதலமைச்சர் திறந்து வைத்தார்! * குமரி கேரள எல்லையான ஆறுகாணி அருகே அம்பூரி பகுதியில் இருந்து புரவிமலை, புறத்தி, தென்மலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல கடந்த 5 தலைமுறையாக பாலம் வசதி இல்லாமல் இருந்தது. * இதனால் அப்பகுதி மக்கள் நெய்யாற்றில் படகு மூலம் கடந்து வந்தனர். * பழங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்ற கேரளா முதலமைச்சர் திரு. பினராய் விஜயன் அவர்கள் 235 மீட்டர் தூர அளவில் பாலம் அமைக்க உத்தரவிட்டார். * இந்நிலையில் இன்று(பிப்.11) மாலை 5.30 மணி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் பாலத்தை திறந்து வைத்தார். * மேலும் களியக்காவிளை, நெய்யாறறின்கரை, காட்டாகட ஆகிய பகுதிகளுக்கு செல்ல கும்பிச்சல் கடவு பகுதியில் இருந்து 4 பேருந்துகளின் சேவைகளும் துவக்கி வைக்கப்பட்டது. * இதனால் பழங்குடி மக்கள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். * மேலும் இப்பகுதி ஓர் சுற்றுலா தலமாக மாறி வருகிறது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்