Jikuna News
739 views
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 📰 தஞ்சை அருகே மருந்து கடை ஊசி: 25 வயது வாலிபர் திடீர் உயிரிழப்பு தஞ்சை அருகே, வயிற்று வலிக்கு மருந்து கடையில் போடப்பட்ட ஊசியின் பின்னர், வாலிபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை விளார் சாலை, கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த முருகனின் மகன் தமிழ் என்கிற தமிழரசன் (வயது 25). இவர் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று மதியம் வயிற்று வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழரசனை, அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள ஒரு மருந்து கடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடை உரிமையாளர் வயிற்று வலிக்காக ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட பின்னர் வீட்டிற்கு சென்ற தமிழரசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவரை மருந்து கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கடை உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, தமிழரசனை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.