வரி வரியாய்
வர்ணிக்க இங்கு
வார்த்தைகள்
தேவையில்லை...
இரவு...பகலாய்
இடைவிடாத
உரையாடல்களும்
தேவையில்லை...
பரிசுகள் குவிக்கும்
தினப் பண்டிகைகளோ
தேவையில்லை...
இதயத்தின் பாஷையை
நீர் ததும்பும் இரு
விழிகளோடு
எடுத்தியம்பும்...
ஈடில்லா உயிரின்
இணையற்ற
பறிமாற்றம் அது தான்
உண்மை அன்பின்
உயர் அரங்கேற்றம்... 😍
#💖நீயே என் சந்தோசம்🥰#💝இதயத்தின் துடிப்பு நீ#❤️எங்கேயும் காதல்#💞Feel My Love💖#💖காதல் ஸ்டேட்டஸ்🥰