கட்டாயம் படிக்க வேண்டிய...
அருமையான பதிவு!
"நான் பலகாலம் எல்லோரையும் போல என் வயதுக்கு ஏற்ற உடை (வெள்ளை வேட்டி, அரைக்கை சட்டை) உடுத்தி சாதாரணமாக தான் இருந்தேன்...
ஒரு முறை எதேச்சையாக, 'ஓம்' பொறித்த சட்டை கிடைத்தது.
அதை போட்டு கொண்டு வழக்கம் போல ஊர் சுற்றினேன்.
அப்போது,
ஆட்டோ ஓட்டுபவர்,
நான் தங்கிய ஓட்டலில், உணவு அருந்திய உணவகத்தில்,
இன்னும் சொல்ல போனால் கோவிலில் கூட வித்தியாசமாக பார்த்தார்கள்.
சிலரின் பார்வையில் வெறுப்பு பளீர் என்று தெரிந்தது.
இது எனக்கு அதிசயமாக இருந்தது.
'என்னடா இது?
ஒரு பாய் தலையில் குல்லா போட்டு தாடி வெச்சு வந்தாலோ...
'ஒரு பாதிரி வெள்ளை அங்கி கட்டி வந்தாலோ...
'ஒரு பெண் புர்கா போட்டு வந்தா கூட எவனும் கவனிப்பதில்லை!
மரியாதையாக வழி விடறான்...
நான் 'ஓம்' பொறித்த சட்டை போட்டு வந்ததற்கு மட்டும் ஏன் சிலர் வெறுப்பாகவும்... பலர் வியப்பாகவும் பார்ப்பதின் காரணம் என்ன?
அன்று புரிந்தது.
இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து விட்டோம்.
மீறி வெளிப்படுத்தினால் அது 'தவறோ' என்கிற சந்தேகத்தை ஆழமாக இந்துக்கள் மனதிலேயே ஊன்றி விட்டனர்.
அதே போல ஒரு இந்து தன் அடையாளத்தை ஆடைகள் மூலம் வெளிப்படுத்தினால்...
அவன் மாற்று மதத்திற்கு எதிரானவன் என்கிற கருத்தாக்கத்தை மாற்று மதத்தினரிடையேயும் பதிந்து விட்டார்கள்.
இது இன்று நேற்று நடந்ததில்லை.
பல காலமாக...
ஆம், வெள்ளைக்காரனிடம் வேலைக்கு சென்றவனிடம் 'Professional Ethics' என்று வெள்ளைகாரன் உருவாக்கினான்.
அதாவது, வேலைக்காரர்களிடம் 'இந்து' அடையாளம் எதுவும் இருக்க கூடாது.
அதன் நியாய அநியாயத்தை சிந்திக்காமல் சம்பளத்திற்காக 'சலாம்' போட்டு வந்தார்கள்.
அது தான் இன்று வரை தொடர்கிறது.
இன்றும் மறைமுகாக இயக்கி வருகிறான்.
சினிமா, டிராமா என்று எல்லாவற்றிலும் இப்படி நம் அடையாளத்தை வெளிப்படுத்துவதை 'நாகரீகம், நகைச்சுவை' என்கிற பெயரில் மொட்டையாக கிண்டல் செய்வதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.
நாமும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
சிரித்து விட்டு கடந்து போய்விடுவோம்.
நாம் என்றாவது தாடி வளர்த்த பாயை கிண்டல் செய்த படம் பார்த்திருப்போமா?
பாதிரியை கிண்டல் செய்வதை படமாக்கியிருப்போமா?
மாட்டோம்.
இப்படி இந்துக்களின் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை நிறுவிய பிறகு...
அவனை விபூதி பூசு, பெண்களின் நெற்றியில் திலகம் இடு என்று சொன்னால்... யார் கேட்பார்கள்?
நானும் இதை சாதாரணமாக கடந்து சென்றவன் தான்.
அன்று, எதேச்சையாக நான் அணிந்த 'ஓம்' பொறித்த ஒரு சட்டை...
என்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வைத்த போது தான்,
என் (நமது) மத சுதந்திரம் பறி போயிருப்பதை உணர்ந்தேன்.
இது எங்கு போய் முடியும்? என்று பார்க்கும் போது...
நமக்கு (இந்துக்கள்) எதிராக மாபெரும் 'சதி' பின்னப் பட்டிருப்பதை அறிய முடிந்தது.
இது நமது மதத்தை மட்டுமல்லாமல்...
நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலை அழிக்க உருவாக்க பட்டடது என்பதை உணர முடிந்தது.
உலகின் உன்னதமான வாழ்வியல்...
நமது வாழ்வியல் தான்🎯
இதன் மூலம் தான்...
உடல், மன ஆரோக்கியத்தை நாம் அடைந்து...
பிறந்ததற்கான பயனை அடைய முடியும்.
எனவே, நமது வாழ்வியலை அழிய விடக்கூடாது.
அப்படி அழிய விட்டால் 'நமது தலையில் நாமே மண்ணை அள்ளி போடுவது' மாதிரி தான்.
இதனை மாற்ற வேண்டும்.
முதலில் நான் மாற வேண்டும்.
என் நாட்டில் என் மத அடையாளங்களை நான் போட்டுக் கொள்வது சாதாரணமாக இருக்க வேண்டும்.
அது வியப்பாக இருக்க கூடாது.
உலகெங்கிலும் தன்னை நிறுவிக் கொள்ள முனைப்படும் இயக்கங்கள் முதலில் செய்வது...
மக்களின் தனித்துவ அடையாளங்களை அழிப்பது தான்.
இது தவறு!
நம் நாடு!
நம் அடையாளம்!
நம் நம்பிக்கை!
நம் கலாசாரம்!
இதனை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
இது தான் ஒவ்வொரு குடிமகனின் கடமை.
அன்றிலிருந்து...
நான், முடிந்த வரை என் உடைகளில் காவியை சேர்த்தே வருகிறேன்.
நெற்றியில் சந்தனம் குங்குமம் இட்டே வலம் வருகிறேன்.
லண்டனில்... வேட்டி கட்டி, நெற்றியில் சந்தனத்துடன் பாட்டு பாடி செல்லும் வெள்ளைக்கார 'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தவனுக்கு இருக்கும் தைரியம்...
நமக்கு ஏன் இல்லை❓
#💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚨கற்றது அரசியல் ✌️