#📢தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு🗳️ சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாநில முன்னாள் முதல் முதலமைச்சர்
பூ.ச.குமாரசுவாமி ராஜா நினைவு தினம்
ராஜபாளையத்தில் பூசப்பட்டி சஞ்சீவி ராஜா- முத்தம்மாள் இணையருக்குப்
1898 ஜூலை 8
இராசபாளையத்தில் பிறந்த
குமாரசாமி ராஜா மாணவப் பருவத்திலேயே அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். ராஜபாளையத்தில் ஹோம்ரூல் இயக்க மாநாடு ஒன்றை நடத்தினார். பி.பி. வாடியா அதற்குத் தலைமை தாங்கினார்.
அப்போது சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும்
1949ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொறுப்பில் இருந்தார்.
1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். மேலும் 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி, மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.
தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்த ராஜபாளையத்தில் மண்ணின் மைந்தர்
பி.எஸ். குமாரசாமி ராஜா
1957 மார்ச் 16ல் மறைந்தார்.
#🔶பாஜக #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #🙏நமது கலாச்சாரம்