*புனித சந்தியாகப்பர் நவநாள் ஜெபம். மற்றும் புகழ்மாலை.*
🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🌻
*⚜️புனித. சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்⚜️*
தேவ அன்னையினால் மிகவும் நேசிக்கப்பட்டவரும் சேசுவின் சீடருமான அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே திருச்சபையின் எதிரிகளால் துன்புறுத்தப்பெற்ற ஸ்பெயின் நாட்டு கிறீஸ்தவர்களுக்கு இரங்கி வெள்ளைக் குதிரை மேல் ஏறி எதிரிகள் படையை முறியடித்த புனித அப்போஸ்தலரே! அறநெறியை விரும்பாதவர்களாலும், பிசாசுகளினாலும் வீண், பொய், மாயைகளினாலும் நான் படும் துயரம் எவ்வளவோ பெரிதாகியிருக்கிறது. நான் விரும்புகின்ற நன்மையை அல்ல, நான் விரும்பாத தீமையையே செய்ய ஏவப்பட்டு பரிதவிக்கிறேன். நெருக்கப்படுகிற நாளில் என்னைக் கூப்பிடு அப்போது நான் உன்னை விடுவிப்பேன் என்ற வேத வாக்கியத்தை நினையாமல் உருக்கமாக ஜெபம்செய்ய மறந்து என் ஆபத்துக்களில் மிகவும் பரிதவிக்கிறேன். கேளுங்கள் கொடுக்கப் படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வேதவாக்கை துன்ப வேளையில் மறந்து போகிறேன். நீர் என்மீது இரக்கம்வைத்து எனக்காக கடவுளை மன்றாடி என் ஆபத்துவேளையில் நான் வெற்றி பெற எனக்குத் துணையாகவாரும். நான் பலவீனன் நான் செய்த பாவங்களே என்னை நெருக்கத் தொடங்குகின்றன. எனக்கு நேரிட்டிருக்கும் துன்பங்களாகிய சிலுவையை நான் சுமக்க வேண்டும் என்பது அவர் சித்தமானால் அவர் திருச்சித்தம் நிறைவேறட்டும். ஆபத்துக்களில் உதவுகிற அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்கள் அன்புக் காவலரே, நான் என் பலவீனங்களில் தடுமாறி விழாமல் காத்தருளும்.
இரக்கம் நிறைந்த அப்போஸ்தலரே துன்ப வேளையில் உதவி செய்யும் அற்புதரே! என்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களிலும், ஆபத்துக்களிலும் நான் அலைக்கழிக்கப்பட்டு, கலங்காதபடி என்னைத்தேற்றி அரவணைத்தருளும் அன்று எதிரியின் படையை முறியடிக்க உம்மை நம்பி அபயமிட்ட ஸ்பெயின் நாட்டவருக்கு உதவியாய் வந்து அவர்களுக்கு வெற்றி அளித்தது போல், இருகரம்கூப்பி உம்மைநோக்கி அபயமிடும் எங்களுக்கு இவ்வேளையில் உதவியாய் வந்து, என்னைச் சூழ்ந்து நிற்கும் ஆன்ம எதிரிகளை முறியடித்துத் துரத்தி தேவ உதவியால் நான் முழுவெற்றி அடைய எனக்காக கடவுளை மன்றாடும்!
ஆண்டவராகிய சர்வேசுரன் உமது மன்றாட்டினால் என் வேண்டுதலைக் கேட்டருள்வார். நீர் கூவி அழைத்த தேவ அன்னை விரைந்து வந்து உமக்கு உதவி செய்தது போல், நீரும் என் மரண நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்து நான் நல்ல மரணம் அடைந்து, முடிவில்லாப் மோட்ச பாக்கியத்தைப் பெற சர்வேசுரனை நோக்கி மன்றாடும்.
*ஆமேன்.*
🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁
*புனித சந்தியாகப்பர் பிராத்தனை*
🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!
விண்ணகத்திலும் மண்ணகத்திலும் இருக்கும் எங்கள் தந்தையே
- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எங்களை மீட்ட இயேசு கிறிஸ்துவே
- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எங்களை விசுவாசத்தில் பலப்படுத்தும் தூய ஆவியானவரே
- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மூவொரு இறைவனாகிய ஆண்டவரே
- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் புனித மரியே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நல் மரணத்திற்கு பாதுகாவலாம் புனித சூசையப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வேதசாட்சியான புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவ அன்னையினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபதேயுவின் அன்பு மகனான புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசு உம்மை அழைத்தபோது, தந்தையையும், வலைகளையும் விட்டு உடனே அவரைப் பின்சென்ற புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவால் உம் சகோதரர் யோவானாடு, இடியின் மக்கள் என அழைக்க வரம் பெற்ற புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசு பூங்காவனத்துக்கு போனபோது உடன் சென்ற புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவின் விண்ணேற்றத்திற்க்குப் பின் உயிர்த்த ஆண்டவரின் சாட்சியாக அவரைவிட வேறு கடவுள் இல்லை என்று யூதேயா, சமாரியா நாடுகளில் இறைபணி செய்த புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஸ்பெயின் நாட்டில் எண்ணற்ற மக்களுக்கு உண்மை மறையை போதித்து, மந்திரவாதியான ரமோசான் என்பவருக்கு திருமுழுக்கு அளித்த புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உறுதியான மனதுடன் இயேசுவைப்பற்றி போதித்ததை கேட்ட ஏரோது அக்கரிப்பா, உமக்கு மரணத்தீர்ப்பு அளித்தபோது அதை இயேசுவுக்காய் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வேதசாட்சியாய் மரித்த புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொலைக்களத்துக்கு உம்மை அழைத்துச் சென்றவன் கிறிஸ்தவன் என்பதை கேட்டு அறிந்து பெருமகிழ்ச்சியுற்ற புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொலைக்களத்திற்கு உம்மை அழைத்துச் சென்ற கொலைஞன் உம்மிடம் பாவமன்னிப்பு கேட்டபோது சமாதானத்தை அளித்த புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வானதூதர் புடை சூழ இத்தாலி நாட்டில் உண்மை மறையைப் போதித்த புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எபேசு நகரில் தேவ அன்னையை அற்புதமான வகையில் கண்டு தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவ அன்னை உம் கரம் பிடித்து தூக்கி நிறுத்தி, அந்த விண்ணக மண்ணக அரசியின் எண்ணற்ற வரங்களையும் பெற்ற புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எருசலேமில் நீர் வேதசாட்சியாக இறப்பீர் என்று தேவ அன்னையின் மூலம் அறிந்து அவ்வேளையில் அன்னையின் உதவியை மன்றாடி பெற்ற புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எருசலேமில் விசுவாசத்தோடு நீர் போதித்ததை கண்ட வேத விரோதிகள் உம்மை சிறை பிடித்தபோது தேவ அன்னையை நோக்கி மன்றாடிய புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உமது திருவுடல் கம்போஸ்தலா என்னும் நகருக்கு கொண்டு செல்ல. அங்கு பலப் புதுமைகள் நிகழவே, மக்களால் மரியாதையோடு வணங்கப்பட்ட புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நீர் விண்ணகம் சென்றபின் ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்துவர்களை எதிர்த்து படையெடுக்க அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக் கொண்ட போது, பகைவர் அஞ்சி ஓடும் படியாக வெள்ளைக் குதிரை மேல் ஏறி வந்து, அவர்களை விரட்டியடித்த புனித சந்தியாகப்பரே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே -
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே -
எங்கள் பாவங்களை போக்கியருளும் சுவாமி.
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே -
எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும் சுவாமி.
*🙏🏻செபிப்போமாக🙏🏻*
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே வேதசாட்சியும், உமது சீடருமான புனித சந்தியாகப்பருக்கு உயர்ந்த வரங்களை கொடுத்து, எருசலேம் நகரிலும், ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலும், அவரால் பல புதுமைகளை செய்வித்து, எண்ணற்ற மக்களை திருட்சபைக்கு அழைத்தீரே அவரை போற்றி புகழ்ந்து வணங்குகிற எங்களுக்கும் இவ்வுலகின் ஆசைகள், சாத்தானின் ஆதிக்கங்கள், துன்பங்கள் அனைத்தையும் வென்று, முடிவில்லா பேரின்பத்தை பெற அருள் புரியுமாறு புனித அடைக்கலமாதா வழியாகவும், எங்கள் பாதுகாவலரான புனித சந்தியாகப்பர் வழியாகவும் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
*- 🙏🏻ஆமென்.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்