sakthi m
636 views
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🔶பாஜக #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 பாஜகவை விட்டு விலகுகிறாரா அண்ணாமலை ? தனி கட்சி தொடங்குகிறாரா? அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? மாற்று கட்சியில் சேருகிறாரா? இப்படி எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில்தான் ..........நிச்சயமாக "இல்லை". "கழுதை கெட்டால் குட்டிச் சுவர்" என்பது போல, இவருக்குப் புகலிடம் தர பாஜகவைத் தவிர வேறு இடமில்லை. இவராலும் வேறு எந்த eco-சிஸ்டத்திலேயும் இயங்குதல் சாத்தியமற்றது. தனி கட்சி தொடங்கி இரண்டு வருடங்களில் தான் சாம்பாதித்ததை இழக்க அண்ணாமலை ஒன்றும் பைத்தியம் இல்லை. இவரை ஒரு 'தலைவன்' என்று நம்பி, பின்னால் சென்று ஏமாந்த அப்பாவிகள்தான் இங்கே பரிதாபத்திற்குரியவர்கள். அண்ணாமலையிசம் எனும் 'பணம் காய்ச்சி மரத்திற்கு' பாஜகதான் வேர். அதை விட்டு அவர் ஒருபோதும் நகர மாட்டார். இந்தத் தேர்தலில் பாஜக சந்திக்கப்போகும் படுதோல்வியைத் தன் கணக்கில் ஏற்றிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அந்தத் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ளவே இந்த 'விலகல்' நாடகம். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் அன்றே, மீண்டும் ஆஜராகிவிடுவார். "அண்ணாமலை இல்லையென்றால் தமிழக பாஜக ஒரு பூஜ்யம்", "அண்ணாமலை மட்டும் இருந்திருந்தால் NDA ஆட்சியை பிடித்திருக்கும்" போன்ற narrative செட் செய்து மேலிடத்திற்கு சங்கடம் கொடுக்கவே இந்தத் தந்திரம். அதே நேரம் தன் இருப்பை நிலைநாட்ட, இந்தத் தேர்தலில் பாஜக தோற்பதற்கான அத்தனை 'உள்ளடி' வேலைகளையும் தன் ஆதரவாளர்கள் மூலம் அவர் மிக கச்சிதமாக செய்வதை பார்க்கத்தான் போகிறோம். ஆனால், இந்த நாடகத்தில் ஒரு சுவாரசியமான, அவிழ்க்கப்படாத ஒரு முடிச்சு ஒளிந்திருக்கிறது. இந்திய அடாவடி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, இவரைவிட பத்து மடங்கு கிரிமினல் மூளை கொண்ட 'அம்சா'விற்கு இவர் விடும் நேரடி சவால் இது. பரிசு தரப்போகிறாரா பதிலடி தரப்போகிறாரா என்பதை காலம்தான் சொல்லும்! #ஆடு_புலி_ஆட்டம்