சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை
கனிமவள டாரஸ் வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
* சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்களின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.
* இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் இருசக்கர வாகன ரோந்து (Two Wheeler Patrol) என மொத்தம் 44 இரு சக்கர வாகன ரோந்தில் 88 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பார்க்கிங் வசதிகளுக்காக தனி போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.
* முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவ "May I Help You" சாவடிகள் நிறுவப்படும்.
* பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் பைகளில் reflective strickers பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும்.
* பக்தர்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசைமற்றும் தூரம் காட்டும் வரைபடங்கள் நிறுவப்படும்.
* பெண் பக்தர்களுக்கு உதவ பெண் காவலர்கள் நியமிக்கபடுவார்கள்
* 🚫 சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கனிமவள டாரஸ் கனரக வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது .
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்