பௌர்ணமி-பங்குனி உத்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்... 🙏
வெய்யோன் வெந்து பூமியை தகிக்க
வெள்ளருவியாய் அம்மாநீ வந்து குளிராட்ட,
கங்கையாய் ஓடி வந்து அணைத்து
கண்ணம்மா போலே எமைத் தாலாட்டு…!
சிவன்ஜடையிலே துள்ளும் கங்கைநீரு,
சிந்தை தெளிவாக்கி சீராக்கி சிறப்பாக்கும்
அன்பு நிறைந்த சரீரம் அருளாலயம்
அதுவே அறம் தங்கும் புனித நிலம்…!
பங்குனி மாதம் பௌர்ணமி நாளு,
பாவங்கள் போகும் பாக்கியம் நல்கும்,
அருவிக்குள்ளே ஆனந்தமாய் ஆடிக் குளிச்சா,
ஆண்டவன் அருள் நம்மைத் தழுவும்…!
குழந்தைக் குமரன் சிரிப்பு காற்றிலே கேட்கும்,
குழந்தை பிள்ளையார் நீரிலே ஆடி விளையாட...
மயிலும் எலியும் பக்கம் பவிசாய் நிற்க,
மலர்கள்கூட சிரித்து மணம் வீசும் மௌனமாய்…!
“ஓம்”-மென்று அருவி ஓங்காரமாய் ஒலிக்க,
“நமசிவாய”ன்னு மனசு முனுமுணுக்க
“சரவணபவா”ன்னு காதில் கானமாய் விழ,
தந்தை-தனயன் அருள் கலந்தாடும்…!
வெயிலும் இங்கே வேதனை அல்ல
வெப்பம் அருளோடு மிதமாய் காக்க
தெய்வக் குழந்தைகள் நீராடும் நேரம்,
தெய்வ அருள் பிறக்கும் நம்முள்ளே…!
ஓம்... நமசிவாய...
ஓம் சரவணபவ...
#பங்குனி உத்திரம் 🙏💯 #பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள் Vrp 🔔 #பங்குனி உத்திர நல்வாழ்த்துக்கள் #🕉️ஓம் முருகா #🔥🔱🕉️ முருகன் பக்தி ஸ்டேட்டஸ் 🕉️🔱🔥