நடேசன் S
654 views
14 hours ago
#டி_எல்_மகராஜன். எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த தன் இளம் பிராயத்தைப் பகிர்ந்தவர், ``கேள்வி ஞானத்துல பாட ஆரம்பிச்ச எனக்கு, `திருவருட்செல்வர்’ படத்துல பாட வாய்ப்பு கொடுத்தார் அந்தப் படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன் ஐயா. அந்தப் பாடல் ரெக்கார்டிங்க்கு போறதுக்கு முன்தினம். குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில சிகிச்சையிலேருந்த எம்.ஜி.ஆர் கிட்ட ஆசீர்வாதம் வாங்க என் பாட்டி சி.டி.ராஜகாந்தம் என்னைக் கூட்டிட்டுப்போனாங்க. அப்போ நான் கர்னாடக சங்கீதம் கத்துக்கலை. நாங்க வந்ததுக்கான விவரத்தைக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியின் டீன், முக்கியமான மருத்துவர்கள், ஊழியர்கள் பலரையும் கூப்பிட்டார். கொஞ்ச நேரத்துல 50-க்கும் மேற்பட்டோர் அந்த அறையில கூடினாங்க. `பையன் சினிமால பாடப் போறான். எல்லோரும் பையனை ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னார். பிறகு, பக்திப் பாடல் ஒண்ணு பாடச் சொன்னார் எம்.ஜி.ஆர். கண்ணை மூடி என் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், எங்கப்பா பாடிய பாடலைப் பாடச் சொன்னார். `ஆசையே அலைபோலே’ பாடலைப் பாடினேன். உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர் எழுந்து நின்னு வாழ்த்த, எல்லோரும் கைதட்டி என்னைப் பாராட்டினாங்க. `பையன் நல்லா பாடுறான். உடனே கர்னாடக சங்கீதம் கத்துக்கொடுங்க. அதுக்கான செலவை நானே ஏத்துக்கிறேன்’னு பாட்டிகிட்ட சொல்லி, உச்சிமோந்து என்னை வாழ்த்தினார். முதல்வரா இருந்தப்போ மதுரையில முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்.ஜி.ஆர், அந்த நிகழ்ச்சியில பாட எனக்கு வாய்ப்பு கொடுத்தார். என் கல்யாணத்தின்போது அவர் உடல்நிலை சரியில்லாம இருந்தார். டாக்டர்கள் சொன்னதை மீறி, என் கல்யாணத்தை நடத்தி வைக்க வந்தவர், கல்யாண செலவைவிட ரெண்டு மடங்கு தொகையை அன்பளிப்பா கொடுத்தார்" பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இணையத்தில் இருந்து #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்