Fakir Mohamed Lebbai
623 views
2 months ago
சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்! - நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஜனநாயகத்தின் மிக உயரிய இடமாகவும், மக்களின் பிரதிநிதிகள் தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளை முன்வைக்கும் தளமாகவும் விளங்குவது நமது நாடாளுமன்றம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை விவாதிக்கக் கோரிய, தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கே எதிரானது. மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை, அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குவது என்பது ஆரோக்கியமான நாடாளுமன்ற நடைமுறைக்கு அழகல்ல. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே அவர்கள் தனது நினைவுக் குறிப்பு புத்தகத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமானவை. ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவரின் கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கோருவதும், விவாதம் நடத்துவதும் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். அந்த கடமையைச் செய்ய முற்பட்ட உறுப்பினர்களைச் சபையிலிருந்து சஸ்பெண்ட் செய்வது, அரசின் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதோடு, உண்மைகளை மூடி மறைக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நாட்டின் மிக முக்கியமான முடிவெடுக்கும் இடமான நாடாளுமன்றத்திலேயே அதைப் பற்றிப் பேசக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. எம்.பி.க்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஒரு அரசு தற்காலிகமாக விவாதங்களைத் தவிர்க்கலாம், ஆனால் மக்களின் கேள்விகளைத் தவிர்க்க முடியாது. எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கத்தை உடனே ரத்து செய்வதுடன், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩