சுரேஷ் குமாரா
529 views
13 hours ago
பல பெண்களை ஏமாற்றி தகாத உறவு... நகைகளைப் பறித்து விடிந்ததும் எஸ்கேப்... சோஷியல் மீடியாவில் சிக்கும் பெண்கள்... ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே காவல் ஆய்வாளர் உட்பட பல பெண்களை ஏமாற்றி தகாத உறவிலிருந்து பணம் மற்றும் நகைகளைப் பறித்துவந்த கேடி நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குண்டாஸ் வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளிவந்த குற்றவாளியின் வக்கிர புத்தி அம்பலமானது எப்படி? விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்தவர் 36 வயதான ராம்குமார். திருமணமான இவர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் பெண்களுக்கு வலைவீசி காதல் அம்பு விட்டுள்ளார். அதில் சிக்கிய பலரிடம் திருமண ஆசை காட்டி விடிய விடிய சேட்டிங் செய்து பழக்கத்தை நெருக்கமாக்கியவர், தனிமையில் சந்திக்கலாம் எனக்கூறி பெண்களுடன் தகாத உறவில் இருப்பதுடன் அதே பழக்கத்தை வைத்து, அவசர தேவை என பலரிடமும் பணம் வாங்கியும் ஏமாற்றியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட திருமணமான பெண் ஒருவர், தன்னிடம் இருந்து நான்கரை சவரன் தங்க நகைகளையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வாங்கி ஏமாற்றிவிட்டதாக, ராம்குமார் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகை மற்றும் பணத்தை பறிக்கும் வரை அமைதியாக காத்திருந்தவர், அதன் பின்னர் தன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாக அப்பெண் வேதனை தெரிவித்திருந்தார். இப்புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், சத்யா நகர் பகுதியில் சென்று கேட்டபோது ராம்குமார் ஏற்கனவே கொலை மற்றும் வழிப்பறி, காவல் ஆய்வாளர் பெண் உட்பட பல பெண்களை ஏமாற்றி குண்டாஸ் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வெளிவந்த ஜாமீன் கைதி என தெரியவந்தது. : இமயமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி.. வெளிச்சத்துக்கு வந்த மோசடி.. என்ன நடந்தது? இதனையடுத்து மீண்டும் ராம்குமாரை கைது செய்த அவரை, காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க, அவரின் பிளே பாய் வரலாறு ஒவ்வொன்றாக வெட்ட வெளிச்சமானது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை விருதுநகர் சிறையில் அடைத்தனர். சோஷியல் மீடியாவில் அறிமுகம் இல்லாத ஆண்களை நம்பி, பணம் மற்றும் நகைகளைக் கொடுத்து பெண்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். #📺வைரல் தகவல்🤩