இப்படி எப்படி..
பார்த்ததும் பிடித்துப் போகிறது..
ஒரே பார்வையில்
பேசா இதழ்களில்..
அது ஒருவரிடம் தானா..
பார்க்கும் ஒவ்வொருவரிடமா..
..
அன்றில் அந்த ஒருவர்..
பலரின் ஒரே பார்வையில்
பிடித்தவர்களாக..
..
நினது எனதென பின்புலம்
எவ்வித ஆராய்ச்சியில்..
எதுவுமே தெரியாமல்..
..
இந்த உணர்வு ஆண்களில் மட்டும் தானா..
பெண்களிடமுமா.
..
தூண்டில் மீனாக.. சிக்குமா சிக்காதானு
வலைவிரிக்கும்.. பழைய வித்தை
இப்பொழுதும் நம்பப் படுவது
விந்தையே..
..
ஏன் இப்படி.. கொஞ்சமேனும் மூளையை
உரசி.. அல்லது கழட்டி வைத்தாவது..
..
இதில் எத்தனை முரண் இருக்கிறது..
எப்படி சாத்தியமென யோசித்தால்
..
கேக்கத் தோணாதல்லவா!
..
வண்டு தொட விரும்பும்
பூக்கள் எல்லாம் சாதுவும் இல்லை..
புதுவாசத்தால் குத்தியும்
செயலிழக்க செய்யும்..
..
அத்தனை பலவீனமானது பூக்களும்
அல்ல.
உன்னை உள்ளிழுத்தே மூச்சுத்திணற
கொல்லவும் செய்யும்.. கவனம்..
..
நான் அவளில்லை..நீயும்.. நீயும்கள்
என் அவனாக..வாய்ப்பில்லை..
..
கவிதையோடு.. காண்பதோடு
கடந்து போங்கள்...
உங்களிடம் வேறோரு எதிர்பார்ப்பில்லை..
கசடுகள் காணாமல் போனால்
நிம்மதியே.. இவள்..
பெண்களின் குரலாக..
#🌹Thursday thought✨️ #thursday சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤔புதிய சிந்தனைகள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏