காலம் நெருங்குகிறது.. ஒப்புரவாக தயாராகுவோம்!*
*1. ஒரு உன்னத சந்திப்பு..*
✍️ திருநீற்று புதனுடன் இன்று நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம்.
ஏனெனில் தவக்காலம்..
அருளின் காலம்
இரக்கத்தின் காலம்
மன்னிப்பின் காலம்
ஒப்புரவின் காலம்.
✍️கத்தோலிக்கர்களாகிய நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு பெரியபொக்கிஷம் "ஒப்புரவு அருள் சாதனம்". நம்மில் பலர் ஒப்புரவு அருள்சாதனத்தை பெறுகிறோம்.
அதே வேளையில் பலர் அதைத் தவிர்க்கிறோம். அதற்கு சில "அறிவார்ந்த" விளக்கங்களையும் கொடுக்கிறோம். ஆனால் ஒப்புரவு அருள்சாதன அறைக்குள், என்ன நடக்கிறது என்பதை மிகச் சிலரே உண்மையில் புரிந்துகொள்கிறார்கள்.
✍️ பாவமன்னிப்பு என்பது, வெறுமனே தவறுகளை ஒப்புக்கொள்கிற நிகழ்வு மட்டுமல்ல; அல்லது சிதைந்து போன ஆன்மாவுக்கு சிகிச்சை அளிக்கும் கூடமும் அல்ல; அல்லது நம்பிக்கையாளர்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கத்தோலிக்க பாரம்பரியமும் அல்ல. மாறாக, இறைவனின் இரக்கத்தில் இணைகின்ற ஒரு உன்னதமான சந்திப்பு.
*2. திருத்தூதர்களுக்கான அதிகாரம்..*
✍️ நம்மில் பலர், உண்மையில் அது எவ்வளவு ஆழமானது என்பதை உணர்வதில்லை.
யோவான் 20:22–23-ல், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஆண்டவர் இயேசு தம் திருத்தூதர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா" என்று கூறுகிறார்.
✍️ முக்கியமான ஒன்றை இங்கே கவனியுங்கள். அவர் அவர்களிடம், பொதுவாக மன்னிப்பை அறிவிக்கச் சொல்லவில்லை. மாறாக, குறிப்பிட்ட பாவங்களை மன்னிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்.
*3. சிலுவையின் அடிவாரத்தில்..*
✍️ அதாவது பாவமன்னிப்பு என்பது, மனித கண்டுபிடிப்பு அல்ல. அது ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலில் இருந்து, நேரடியாக நம்மில் பாய்கிறது. தொடக்க நூலில் மனிதனுக்கு உயிர் கொடுத்த அதே மூச்சு, இப்போது மன்னிப்பு மூலம், புதிய வாழ்க்கையைத் தருகிறது.
✍️ பலர் தவறவிடுவது இதுதான்: நாம் பாவ மன்னிப்புக்காக, ஒப்புரவு அருட்சாதன தொட்டியில் மண்டியிடும்போது, நாம் காற்றோடு பேசுவதில்லை. சிலுவையின் அடிவாரத்தில் நிற்கிறோம். குருவானவர் தனது சொந்த சக்தியால் நம்மை மன்னிக்கவில்லை. மாறாக, மறு கிறிஸ்துவாக செயல்படுகிறார். ஆகவே, அங்கு கேட்கிறவர் மறு கிறிஸ்து. மனதார மன்னிப்பவர் மறுகிறிஸ்து.
✍️ ஆகவே, கிறிஸ்துவே நம்மை மன்னிக்கிறார்.
அதனால்தான் குருவானவர் இறுதி செபத்திலே, "கடவுள் உன்னை மன்னிக்கிறார்"
என்று சொல்வதில்லை. மாறாக, "தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உன் பாவங்களை மன்னிக்கின்றேன்." என்று சொல்கிறார்.
✍️ இது தனிப்பட்டது. நேரடியானது. உண்மையானது. மேலும் பலர் கவனிக்காத மற்றொரு உண்மை: பாவ மன்னிப்பு என்பது, ஒருவர் செய்த பாவத்தை மட்டும் அழிக்காது. மாறாக அது
தொலைந்து போன அருளை மீட்டெடுக்கிறது.
பாவம் கடவுளின் கட்டளையை மட்டும் மீறுவதில்லை. மாறாக, இறை உறவை அது காயப்படுத்துகிறது. ஆன்மாவை சேதப்படுத்துகிறது.
✍️ பாவமன்னிப்பு, வெறுமனே வர இருக்கும் தண்டனையை மட்டும் ரத்து செய்வதில்லை.
மாறாக தெய்வீக வாழ்க்கையை, ஆன்மாவில் மீண்டும் ஊற்றெடுக்க செய்கிறது. விண்ணகத்தை மீண்டும் பாவிகளுக்காக திறக்கிறது.
*4. விண்ணுலகில் மகிழ்ச்சி..*
✍️ பாவ மன்னிப்பின் போது நாம் நினைக்காத மற்றொன்று நடக்கிறது: பாவத்தை அறிக்கையிடுவதில் இருக்கின்ற தயக்கம்
மறைகிறது. தன்னம்பிக்கை வளர்கிறது. மன அமைதி பிறக்கிறது. பாவத்தின் பிடி தளர்கிறது.
✍️ மேலும் பாவ அறிக்கையின் போது, சாத்தான், ஒருவரின் பாவத்தை மறைக்க விரும்புவான். ஆனால், கிறிஸ்து அதை குணப்படுத்த விரும்புவார்.
அதனால்தான் ஒப்புரவு அருள்சாதனம், பலருக்கு கடினமாக தோன்றுகிறது.
✍️ பாவமன்னிப்பு என்பது, மனத்தாழ்ச்சியின் அடையாளம். எனவே, ஒருவரின் தற்பெருமையை (Pride) முதலில் அது தாக்குகிறது. ஆனால், இந்த தற்பெருமைதான், பெரும்பாலான ஆன்மீகப் பிரச்சினைகளின் ஆணிவேர்.
✍️ எனவே, பாவ மன்னிப்பு ஒருவரின் ஆன்மாவை மனத்தாழ்ச்சியில் (Humility) பயிற்றுவிக்கிறது. அம்மனத்தாழ்ச்சியினால் அவர் கொண்டுள்ள பணிவு, இறைவனின் அருளை அவருக்கு கொண்டு வருகிறது.
✍️ எனவே, பாவ அறிக்கையில் ஒருவர் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பாவமும், விண்ணுலகில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. இதைத்தான் ஆண்டவர் சொல்லுகிறார், "மனம் மாறிய ஒரு பாவியை குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" (லூக்15:7).
*5. இறைவனின் இரக்கம்..*
✍️ ஆனாலும், இங்கே ஆபத்து ஒன்று உள்ளது.
சில கத்தோலிக்கர்கள், ஒப்புரவு அருள்சாதனத்தை சாதாரணமாக எதிர்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான மனவருத்தம் கொள்ளாமல், அதே பாவங்களை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். அதோடு அதை விரைவாகச் செய்கிறார்கள்.
✍️ பாவ அறிக்கை என்பது, ஒரு மாய மந்திரம் அல்ல. மனந்திரும்புதலே அதன் அடிப்படை தேவை. நேர்மையான வாழ்வு என்பது,
திருந்தியதற்கான உறுதியான நோக்கம்.
இறைஅருள் தாராளமாக வழங்கப்படுகிறது.
அதற்கு ஒருவரின் முழு ஒத்துழைப்பு தேவை.
✍️ இங்கே கடவுளின் இரக்க செயல் ஒன்று உள்ளது: எந்த பாவமும் கடவுளை அதிர்ச்சிக்குள்ளாக்குவதில்லை. ஏனெனில், ஏற்கனவே அவர் சிலுவையில், கொடூரமான பாவங்களை சுமந்து விட்டார்.
✍️ எனவே ஒப்புரவு அருள் சாதனம், ஒருவரை கண்டனம் செய்கின்ற நீதிமன்றம் அல்ல. மாறாக குணப்படுத்துவதற்கான மருத்துவமனை. நாம் தூயவராக இருப்பதால் செல்வதில்லை. மாறாக தூய்மையாக வேண்டும் என்பதால் செல்கிறோம்.
*6. இறுதியாக..*
✍️ அடுத்த முறை ஒப்புரவு அருள் சாதனத்தை பெறுகின்றபோது, நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு சிறிய அறைக்குள் நுழைவதில்லை. துளையிடப்பட்ட இதயத்திலிருந்து பாய்ந்த, இரக்கத்திற்க்குள் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள். பெரும்பாலான கத்தோலிக்கர்களுக்கு தெரியாது, அங்கு எவ்வளவு சக்தி நமக்காக காத்திருக்கிறது என்று!
Have a blessed lenten season!!
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்