பேராசை தான்........
பிடித்த ஒன்றை விடாமல் பிடித்துக் கொள்ளும் பிடிவாதம் உன்னிடம் இருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் எனக்கும் பேராசை தான் உன் அரவணைப்பில் நிம்மதியாக பயமின்றி மனதை மிகவும் லேசாகி நீரோடையில் மிதக்கும் இலை போல அவ்வளவு மென்மையான இலகுவான உன் அரவணைப்பில் உன் இதயத்துடிப்பை கேட்டபடி மார்பில் சாய்ந்து கொள்ள ஆசைதான் பேராசை தான் விடாமல் பிடித்துக் கொள்ளும் உன் பிடிவாதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.......
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை மறக்க அவனுக்கு இன்னொரு பெண் இருந்தால் போதும் ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை மறக்க அவள் இறக்க வேண்டும் அப்பொழுதுதான் அவளால் மறக்க முடியும்.....
நான் இறந்த பின் மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும் உன்னோடு வாழ்வதற்காகவே மீண்டும் ஒருமுறை பிறக்க ஆசைப்படுகிறேன் தயவுசெய்து எனக்காக நீயும் ஒரு முறை பிறந்து விடு ......
அந்தப் பிறவியில் நீ முந்திக் கொள்ள வேண்டும் யாரும் வந்து என் கரம் பிடிப்பதற்கு முன்னதாக நீயே என் கரம்பிடிக்க வேண்டும் நீயும் நானும் நமக்கிடையில் வேறு யாரும் நுழைந்து விட முடியாத காற்று கூட நமக்கிடையே புகுந்து விட முடியாத நெருக்கம் வேண்டும்.....
பூட்டி வைத்த அத்தனை ஆசைகளையும் உன்னிடம் கொட்டி தீர்க்க வேண்டும் அத்தனை கனவுகளும் அத்தனை ஆசைகளும் நிறைவேற்றுவதற்காகவே இந்த பிரபஞ்சம் நமக்காக கோர்த்து வைத்திருக்கும் அந்த காலங்கள் நம்முடைய அத்தனை ஆசைகளையும் இத்தனை கனவுகளையும் மனதில் தேக்கி வைத்திருந்த சொல்ல முடியாத அத்தனையும் கொட்டி தீர்க்க என்ன என்ன கனவுகள் கண்டோமோ அத்தனையும் நினைவாக்கிக் கொள்ள நிஜமாக்கிக் கொள்ள நம் கரங்களை சேர்த்து வைப்பதற்காகவே இந்தப் பிரபஞ்சம் ஏற்பாடு செய்திருக்கும் அந்த ஒரு உலகம் நமக்காக காத்திருக்கும் என்று நம்பிக்கையில் இந்த இரவு நிம்மதியாக உறங்க போகிறேன் வெகு நாட்கள் ஆகிவிட்டது நிம்மதியாக நன்றாக உறங்கி ......
இன்று நன்றாக நிம்மதியாக உறங்க வேண்டும்......
#📝என் இதய உணர்வுகள்