#🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🔶பாஜக
இந்திய அரசியல் சட்டத்தின்படி நாமெல்லாம் இந்தியக் குடிமக்களாக முடியும்..
ஆனால் இந்தியர் எனத் தமிழர்களும் மலையாளிகளும் அசாமிகளும் வங்காளிகளுமான ஓர் இனத்தினர் எப்படி இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இன்னோர் இனத்தினராக மாற முடியும்?..
உலகில் உள்ள எல்லா இன மக்களும் அவரவர்களின் இனத்தின் அடையாளத்தைப் பதிந்து கொள்ள முடிகிறது..
சீனர் தங்களை
சீனர் என்று பதிவு செய்ய முடிகிறது..
ஜெர்மனியர் தங்களை
ஜெர்மனியார் எனப் பதிவு செய்ய முடிகிறது.
ஜப்பானியர்கள் தங்களை
ஜப்பானியர் எனப் பதிவு செய்ய முடிகிறது..
தமிழர்களும், வங்காளிகளும், பஞ்சாபிகளும், கேரளர்களும், கர்நாடகர்களும், ஆந்திரார்களும் மற்றும் பிறரும் அவரவர்களின் இனத்தைப் பதிவு செய்து கொள்ள மறுக்கப்படுகிறார்கள்..
இந்த நிலையில் இந்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்துக் கேரள அரசு கேரளியர் எனப் பதிந்து கொள்ள முயற்சி எடுத்திருப்பதை வரவேற்கிறேன்.
இந்த உரிமை தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க வேண்டும்...