தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றும் முரளி வேணு என்பவருக்கும், அவரது மனைவி சத்தியவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று தங்களது திருமண நாள் என்பதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லுமாறு சத்தியவதி கேட்டுள்ளார். ஆனால், முரளி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டுத் தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். முன்னதாக, கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்ததற்காகவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்தியவதி, கணவருடன் வாழ்வதை விட சாவதே மேல் என விபரீத முடிவெடுத்துள்ளார்.
ஆத்திரத்திலும் வேதனையிலும் இருந்த சத்தியவதி, தனது ஐந்து வயது மகன் மற்றும் இரண்டு வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்ததில் சத்தியவதியும், ஐந்து வயது சிறுவன் ருத்ரனும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இரண்டு வயது பெண் குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன் முரளி வேணுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
#📢மார்ச் 17 முக்கிய தகவல்🫠