இன்று யுகாதி பண்டிகை
வசந்த காலத்தின் துவக்கமாக வும், புதிய வாழ்க்கையின் அடையாளமாகவும் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகி றது. இந்த புத்தாண்டு நாளில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இது யுகாதி பண்டிகையின் முழு பலனையும், பல நன்மைகளையும் நமக்கு தருவதாகும்.
தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி அல்லது உகாதி பண்டிகை மார்ச் 19ம் தேதியான இன்று கொண்டாடப் படுகிறது. புத்தாண்டு பிறக்கும் இந்த நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
யுகாதி சிறப்புகள் :
சைத்ர மாதத்தில் வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை அனு சரிக்கப்படுகிறது. யுகாதி என்பது யுகம் + ஆதி ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையே ஆகும். அதாவது யுகம் தோன்றிய நாள் என்பது இதற்கு பொருள்.
புராணங்களின் படி, பிரம்ம தேவர் இந்த நாளில் தான் பிரபஞ்சத்தை படைக்க துவங்கினார் என நம்பப்படுகிறது.
யுகாதியை இந்து புத்தாண்டாக வட இந்தியாவில் கொண்டாடு வது உண்டு. வாழ்வில் பழைய கசப்பான அனுபவங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை மறந்து, புதிதாக துவங்க வேண்டும் என உணர்த்துவதே யுகாதி பண்டிகையின் நோக்கமாகும்.
திருப்பதி, ஸ்ரீசைலம் போன்ற தலங்களில் இந்த நாளில் சென்று சாமி தரிசனம் செய்வது சிறப்பு.
யுகாதி அன்று செய்ய வேண்டியவை :
- வீட்டை சுத்தம் செய்து வண்ண வண்ண கோலங்கள், தோரணங்கள், பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும்.
- வீட்டின் நிலைவாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். இது மங்களங்களை வீட்டிற்கு அழைக்கும் ஒரு சிறந்த செயலாகும்.
- சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, புதிய ஆடைகள் அணிந்து, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை வரவேற்கும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.
- யுகாதி அன்று மறக்காமல் பச்சடி செய்து அனைவருக்கும் பரிமாற வேண்டும்.
- முதலில் யுகாதி பச்சடியை சாப்பிட்ட பிறகே மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். யுகாதி பச்சடி என்பது ஆறு வகையான சுவைகளை கொண்டதாகும்.
- யுகாதி அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் பஞ்சாங்கம் படிப்பது. இந்த நாளில் பஞ்சாங்கம் படிப்பதும், கேட்பதும் மிகவும் சிறப்பானதாகும்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
புத்தாண்டின் துவக்க நாள் என்பதால் யுகாதி அன்று "ஓம் நமோ நாராயணாய" அல்லது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் சிறப்பானது. இது ஆரோக்கியம், அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல்களை தரும்.
அன்றைய தினம், "ஓம் கம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்து வழிபடுவது தடைகள் நீங்கி, வெற்றிகளை தரும்.
நன்றி இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடன்
#🌻வாழ்த்துக்கள்💐