💖ரூபன் 💖
531 views
#👉வாழ்க்கை பாடங்கள் #😔தனிமை வாழ்க்கை 😓 போகப் போக எதுவும் சாதாரணமாகிவிடும்.. என்பதால் இப்போது எதைப் பார்த்தாலும் ஆச்சரியம் வருவதில்லை.. நடக்கும் போது கல் தடுக்கி கீழே விழுந்தாலும்.. தூக்கி விடுவதற்கு எத்தனை கைகள் வந்தாலும்.. கைகளை விட கற்களே பரவாயில்லை என்ற நிலைக்கு மனது வந்துவிட்டது. யாரையும் அதிகமாக நெருங்கி இதயத்தை உடைக்க விரும்புவதில்லை.. தூரத்தில் இருந்தவாறே இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் சுயநலமும் தொற்றி விட்டது.. இப்போது வருபவர்களையும், இதற்கு முன்பு இருந்தவர்களையும் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய பக்குவமும் வளர்ந்து விட்டது.. ஒரு நாள் அழுகை, இன்னொரு நாள் புன்னகை.. இரண்டையுமே அனுபவித்துக் கொள்ளத்தான் வேண்டும்.. என்பதால் இவற்றைக் கணக்கில் எடுப்பதில்லை.. எல்லாமே பழகி விட்டது.. என்பதால். எனது வாழ்க்கையை.. நான் யாரோ ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளனாகவும் மாறி விட்டேன்.. ரூபன் 🙏