கன்னியாகுமரி மாவட்டம் கடையல் மேலே முக்கு பகுதியில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்றை கடையல் வருவாய் துறை அதிகாரிகள் சிறை பிடித்து பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். வாகன ஓட்டுனர் ஓடி தப்பினர். இது ஆலஞ்சோலை பகுதியில் அனுமதி இன்றி இயங்கும் பன்றி பண்ணைக்கு கொண்டு செல்ல முயன்ற போது பிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
தற்போது கடையல் பேரூராட்சி தலைவர், கடையல் காவல்துறையினர் மற்றும் மார்த்தாண்டம் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வாகனத்தை கடையல் காவல்துறையினர் கைப்பற்றினர்.
பேரூராட்சி நிர்வாகம் கழிவை பள்ளம் தொண்டி புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்