Babu Babuji
851 views
சிக்கலில் சிக்கிய கேஎன் நேரு.. முதல் ஸ்டாலின் வரை... ஸ்டாலினுக்கு இரண்டே ஆப்ஷன் தான்! அட்டாக்கை ஆரம்பித்த அண்ணாமலை! அமைச்சர் கேஎன் நேரு மீதான லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு.கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமலாக்கத் துறை கேஎன் நேருவின் சகோதரரின் நிறுவனத்தில் வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும் போது, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணி நியமன ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. 2,538 பேர் நியமனம் செய்யப்பட்டதில் 150 பேரிடம் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக அந்த ஆவணங்களில் இருந்ததாக அமலாக்கத்துறை கூறியது. இதன் மூலம் ரூ.888 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக முதல் குற்றச்சாட்டு எழுந்தது. கே.என். நேரு அந்த குற்றச்சாட்டை அமைச்சர் கே.என்.நேரு மறுத்த நிலையில், தற்போது அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த புதிய கடிதத்தில் வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், லஞ்சப் பணத்தின் ஹவாலா பரிவர்த்தனைகள், ஒப்பந்த விவரங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமலாக்கத் துறை, இதுதொடர்பாக எப்ஐஆர் பதிய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறைக்கு இரு முறை கடிதம் எழுதிய நிலையில், தற்போது 3வது முறையாக கடிதம் எழுதியுள்ளது. அண்ணாமலை குற்றச்சாட்டு இந்நிலையில், லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில்," அரசுப் பணி வழங்க லஞ்சம் - ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் - ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள். அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. மு.க.ஸ்டாலின் ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. கே.என். நேரு FIR தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது. உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது." என அந்த பதிவில் அண்ணமாலை கூறியுள்ளார். #✌️அ.தி.மு.க #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️