ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
683 views
அரசு நிறுவனங்களின் தரம் இப்போது மிகவும் மேம்பட்டுள்ளது, ஒரு ஐஏஎஸ் அதிகாரியே தன் குழந்தையை இங்கு சேர்க்கும்போது சாதாரண மக்களும் தயங்கத் தேவையில்லை" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஐஐடி டெல்லியில் சிவில் இன்ஜினியரிங் முடித்து, 23 வயதிலேயே இந்திய அளவில் 27-வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் ஆன இவர், அரசு அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காகத் தனது மகளைத் தனுஷ் சதுக்கம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ​தனது நேர்மையான செயல்பாடுகளால் ஏற்கனவே பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள புல்கித் கார்க், சித்ரகூட் மாவட்டத்தின் டிஎம்-ஆக கடந்த 2025 அக்டோபரில் பொறுப்பேற்றார். ஹரியானா கிராமப்புற வங்கியில் மேலாளராக இருக்கும் தந்தைக்கும், எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக இருக்கும் மனைவிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், வெறும் பேச்சோடு நிற்காமல் செயலிலும் காட்டிய இவரைப் பலரும் 'ரியல் ஹீரோ' எனப் போற்றி வருகின்றனர். பெரிய தனியார் பள்ளிகளைத் தேடி அலையும் இன்றைய சூழலில், ஒரு உயர்மட்ட அதிகாரி அரசுப் பள்ளி முறையை வலுப்படுத்த முன்னெடுத்திருக்கும் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠