கார்பரேட் சாமியார் என அவதூறு செய்யாமல், ஏதோ ஒரு வழியில்
#சனாதனதர்மம் உலகம் முழுவதும் பரவ வகை செய்யும் முயற்சியினை இந்துக்கள்
பாராட்ட வேண்டும்
----- ----------
ஒரு கார்ப்ரேட் சாமியார்….
ஜீன்ஸ் போடுகிறார்
பைக், கார், விமானம் ஓட்டுகிறார்
கோல்ஃப் விளையாடுகிறார்..
இந்திய பெருந்தலைவர்கள் முதல் உலக பெருந்தலைவர்களோடு உரையாடுகிறார்…
உலக பொருளாதார நிபுனர்களோடு டாவோஸ் மாநாட்டில் ஒரு ஆன்மீகவாதி…. inclusiveness என்ற சொல்லை பயனபடுத்தி உரையாற்றுகிறார்..
நெற்றியில் விபூதி பட்டை கிடையாது ( சக்தி நிலை மேல் நோக்கி நகர உதவியாக சுழுமுனையில் விபூதி கீற்று …
மடாதிபதி அல்ல…. சாதி சார்ந்த ஆதீனமும் அல்ல…
ஆனால் மடாதிபதி, ஆதீனங்கள் போல பல்லக்கு பவனி இல்லை….
ஆனால் அந்த மடாதிபதிகள், ஆதீனங்கள் போல அல்லாமல் மூன்று வித்தியாசமான பள்ளிகளை நடத்துகிறார
( ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா சம்ஸ்கிருதி,ஈஷா வித்யா)…
நடமாடும் இலவச மருத்துவமணைகள்…
இருக்கும் ஒரே கோவிலான லிங்கபைரவியில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா சடங்குகளும்….
உண்டியல் இல்லை
கட்டண தரிசனம் இல்லை..
தினமும் 3000 க்கு மேற்பட்ட யோக மையத்தில் குடும்பத்தோடு முழுமையாக பர்மனெனட்டாக தங்கியுள்ள சம்பளம் இல்லாத தன்னார்வலர்களுக்கு இருவேளை உணவு…
ஏக்கர்களில் பரந்து விரிந்து கிடக்கும் யோகா மையத்தின் பராமரிப்பு..
உலகெங்கும் ஒரு நாள் கூட தவறாமல் நடக்கும் யோக வகுப்புகள்.. அதற்கான செலவுகள்..
இடையிடையே மையத்தில் நடைபெறும் உயர்நிலை residential யோக வகுப்புகள்..
காவேரி கூக்குரல், மண் காப்போம், பசுமைப்பரட்சி என கோடிக்கனக்கான மரங்கள் நட்டு பராமரித்தல், வருடந்தோறும் பல்லாயிரம் கிராமத்தினருக்கான கிராமோத்சவம் என்ற விளையாட்டு போட்டிகள்..
எல்லாவற்றிக்கும் மேலாக.. வருடாவருடம் மஹாசிவராத்திரி என்ற ஒரு உலகளாவிய திருவிழா …
சிவராத்திரி அன்று உலகம் முழுவதும் பல கோடி மக்கள் ஒரே சமயத்தில் “ ஓம் நமசிவாய “ என்ற மந்திரத்தை உச்சரிப்பது ….
வேறு எந்த மடத்திலும். ஆதீனத்திலும் , சமயத்திலும இத்தனை கோடி இளைய சமுதாயத்தினரை ஆன்மீக வழியில் ( யோக மார்க்கத்தில் ) ஈடுபட வைத்தது….
எந்த சமயத்திலும் “ இந்து மதம் “ என்ற சொல்லை உபயோகிக்காமல்… ஆனால் “ இந்த கலாச்சாரத்தில்” என்று சொல்லி வந்தவர்…( நேற்று முதல் முறையாக சனாதன தர்மம் என்ற வார்த்தையை அதன் அர்த்தத்தை சொல்லி உள்ளார் )
மொழி பேதமில்லை, சிகரட், போதை என்று எதுவும் இல்லாமல் ஒரு பிரம்மாண்ட இளைய சமுதாயம் நேற்று முழுக்க முழுக்க அந்த சனாதன தர்மத்தின் ஒரு சிறிய அனுபவத்தை உணர்ந்த தருணம் …
தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆதீயோகி இரதங்கள் புறப்பட்டு வந்திருந்தன…
முழுமையாக யோக பயிற்சி, விரதம் 21 நாள், 48 நாள் என கடைபிடித்து ஷிவாங்கா சாதனா என்று ஆயிரக்கணக்கான இளையோர் வெள்ளியங்கிரி மலை ஏறினர்…
பல வட்சம் மக்கள் கூடிய அந்த ஏற்பாடுகளை… உணவு, தங்குமிடம், கழிப்பறை வசதிகள், கலைஞர்களுக்கு சன்மாணம், போக்குவரத்து செலவு…. என பல கோடி செலவை வசதிப்பட்டோ்ர்களிடம் நன்கொடையாக பெற்று நடத்தி…
ஒரே ஒரு இளைய சமுதாய ஆண் அல்லது பெண்ணை உங்களால் … ஏன் உங்கள் குடும்ப உறுப்பினரைக கூட … இந்த கலாச்சார வழியில் கொண்டு வர முடியுமா ?
ஆனால் முழ நீளத்திற்கு சமூக வலைத்தளத்தில்
அறிவுஜீவிகள் எதிர்மறையாக..,,moron, fraud, , காட்டை அழித்தார், கஞ்சா குடி என்று சல்லித்தனமாக எழுதுகிறார்கள் .. ( இதில் ஒரு வேடிக்கை இந்த எதிர்மறை எழுத்துக்கள் பற்றி அந்த யோகா மையத்தினர் பலர் தெரிந்து கொள்வதில்லை… தெரிந்த சிலரும் இதை சீந்துவதேயில்லை… அவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை யில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் …
இந்த கார்ப்பரேட் சாமியார்.. குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் என்று கூட்டம் சேர்க்கவில்லை…அற்புதங்கள் நிகழ்த்துவதுல்லை… காற்றிலிருந்து விபூதி, லிங்கம் எடுத்ததில்லை…
“ சும்மா என்னோடு இருங்கள்” என்கிறார்.. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த கலாச்சாரத்தில் சொல்லிவந்த விஷயங்களை மறுபடியும் வேறு பரிமாணத்தில் சொல்லி அழைக்கிறார்… அவ்வளவே!
சிவராத்திரியன்று பட்டினி கிட,இரவு முழுதும் கோவிலில் இரு என்று சொல்லவில்லை
ஆனாலும் நடு இரவில் அத்தனை கோடி மக்களை சில நிமிடங்கள் “ ஓம் நமசிவாய “ என ஒரே குரலில் சொல்லவைத்த சாதனையை உலகில் யாருமே.. இதனை நிகழச்செய்யவில்லை...
*****
Muralinathan Guru
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪 தன்னம்பிக்கை #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்