கவிஞர் கோபால்தாசன்
533 views
பொது வெளிக்காதலர் - கோபால்தாசன் உடலோடு உராய்ந்து உறவாடிக் கெடுத்து மடிமீது துய்த்து விடை பெறும் காதல் சதையோடு முயங்கி எலும்புகள் பிடிப்பற்ற சறுக்கினில் சுகித்து சரணாகதியாகும் உலகம் ஆகாயம் எங்கிலும் முகில் மெத்தை விரித்து விண்மீன்களைக் கோர்த்து அணி சேர்க்கும் ஆர்வம் சுடர் உடறெங்கிலும் புகையாய்ப் பொங்கினும் அசையாது கிடக்கும் நிலமாய் மலிவாய் கிட்டிடும் பார்வையின் கருத்தியல் கூறுகளை மெதுவாய் எடுத்தாய்ந்து இருட்டில் நுகரும் சுகம் பேதமை விதான கூடத்தினுள்ளே விரகதாபத்தின் சல்லாபக் காட்சிகளின் அரங்கேற்றம் திருக்கோயில் மண்டப வடிவுகளின்‌ நுட்ப வேலைப்பாடுகளின் சந்தத்தில் புலனைந்தும் திறக்குமாய் இதழ்கள் வரைந்திடும் உமிழ்நீர் கோலத்தினில் உடற் மாற்றம் நிகழ்ந்து உயிர்க்கொடி ஏற்றுமோ முகமூடி அணிந்த பாம்பின் வாயை குகை வாய்க் கவ்வுமோ பூங்கா வெளியின்றி கடற்கரை யாவுமே முகமற்ற காதலர்கள் உச்சி வெயிலெரியும் வேர்த்துருகும்‌ படகு மறைவின் துணையோடு கிறக்கத்தின் சஞ்சாரம் இருப்பவர் யாரென்று அறியார் வழிப்போக்கர் கொண்டவரோ என ஐயம் மல்லிகைச் சரத்தினில் பொன்வண்டென குலாவும் காமுகர் நடமாட்டம் நல்லதோ கெட்டதோ பிரித்தறிய முடியாதொரு தடுமாற்றம் நிகழுமே #😎சிங்கிள்ஸ் Attitude🤙 #📽️காதலர் ஸ்பெஷல் படங்கள் & பாடல்கள்🍿 #🌹ரோஜா புகைப்படம்📸 #📜மாடர்ன் லவ் லட்டர்💖 #🫂Happy Hug Day ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💕