#Ulaganayagan_Kamal update only 🎯
#flashbackmemories : -- #மூன்றாம்பிறை
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து கடந்த 1982ல் வந்த படம் மூன்றாம் பிறை. இந்த படம் பற்றி தெரியாதோர், பார்க்காதோர், இந்த படத்தின் கதை தெரியாதோர் இருக்க மாட்டர்.
அப்பாவி மனநிலை பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி சந்தர்ப்ப சூழ்நிலையால் கமல் கண்ணில் பட, அவரை ஆதரவுடன் வளர்க்கிறார். இறுதியில் அவ்வளவு பாசம் நேசம் பொழிந்து வளர்த்த ஸ்ரீதேவி மனநிலை தெளிந்து வீட்டார்களுடன் கமலை யாரென்றே தெரியாது என சொல்லிவிட்டு அப்பாவியாக பார்த்துவிட்டு டிரெயினில் செல்வதுதான் கதை.
இறுதிக்காட்சியில், கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர். இப்படம் வெறும் 33 லட்சத்தில் எடுக்கப்பட்டது, காலம் கடந்தாலும் இன்னும் பெயர் சொல்லும் படமாய் இருக்கிறது. இன்றைய நிலையில் ஹீரோக்களுக்கே 100 கோடியையும் தாண்டி 200 கோடி வரை சம்பளம் கொடுத்து காலத்தால் அழியாத திரைக்காவியங்களையா கொடுக்கிறார்கள் கண்டிப்பா இல்ல.
ஆர்.எம் வீரப்பனின் மருமகனாக இருந்த தியாகராஜன் அவரின் சத்யா மூவிஸை கவனித்து வந்த நிலையில், தனியாக ஒரு கம்பெனி தொடங்கி படம் தயாரிக்க நினைத்தார், அப்படியாக முதன் முதலில் தொடங்கி முதன் முதலில் தயாரிக்கப்பட்ட படம்தான் இந்த மூன்றாம் பிறை.
இயக்குனர் மணிரத்னமும் தயாரிப்பாளர் தியாகராஜனும் நண்பர்கள், இயக்குனர் மணிரத்னம் தான் பாலு மகேந்திராவை சத்யஜோதி பிலிம்ஸ்க்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அதன் பின் இந்த ஸ்க்ரிப்டை ரெடி செய்ய பாலுமகேந்திராவுக்கு 1 மாதம் ஆகியதாம். இந்த படத்திற்கு 33 லட்சம் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது( இதன் தற்போதைய மதிப்பு 7கோடி)
இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிப்பு கமல், சிறந்த இயக்குனர் பாலுமகேந்திரா, சிறந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என மூன்று பிரிவுகளில் வென்றது. தமிழ்நாடு அரசின் விருதுகள் ஸ்ரீதேவிக்கு கிடைத்தது.
இப்படி சத்யா மூவீசை விட்டுட்டு முதன் முதலில் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்த இந்த முதல் படமே மிகப்பெரிய நற்பெயரை அவர்களுக்கு சம்பாதித்து கொடுத்தது.
இந்த படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ரீபிரியாவாம், அவர் பிஸியாக இருந்ததால் கமல் பரிந்துரையின் பேரில் ஸ்ரீதேவி நடித்தாராம்.
இப்படம் ஊட்டி மற்றும் அதற்கு அருகில் உள்ள கேத்தி நகரத்தில் படமாக்கப்பட்டது. படத்தில் நட்ராஜ் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒரிஜினலாக வரவேண்டும் என்பதால் உண்மை போலவே போடப்பட்டதாம். படத்தில் இடம்பெற்ற பொன்மேனி உருகுதே பாடலை இளவெயிலில் எடுக்க வேண்டும் டான்ஸ் ஸ்டெப் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாரம் இந்த நடனத்திற்கு ஒத்திகை நடந்ததாம், இளவெயிலில் காட்சிகள் இப்பாடலுக்கு இருக்க வேண்டும் என நினைத்ததால், காலை 6 மணி முதல் 8 மணி வரையும் பின்பு மாலை 4.30 முதல் 6 மணிவரையும் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாம்.
கஷ்டப்பட்டு எடுத்து முடித்தாலும், இப்பாடல் எதற்கு அவசியமற்றது இப்படத்துக்கு என தோன்றியதாம் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு பின்பு படத்தின் விளம்பரத்திற்கு இப்பாடல் பயன்படும் என சேர்த்துவிட்டார்களாம்.
க்ளைமாக்ஸ் காட்சிக்காக ரயிலை வாடகைக்கு எடுத்து நடத்தினாராம் பாலு மகேந்திரா. அப்போது மழை பெய்ததாம், இதனால் இக்காட்சியை எடுத்து முடிக்க 5 நாள் ஆனதாம், க்ளைமாக்ஸில் என்ன விஜி என கமல் கெஞ்சிக்கொண்டே செல்லும் அந்த காட்சியில் கமல் ஒரு கம்பம் தட்டி விட்டு விழுவது போல் இருக்கும். இது ஸ்க்ரிப்டில் இல்லை என்றாலும் கமல் தானாக யோசித்து இப்படி செய்வேன் என செய்தாராம். இதற்காக பாலுமகேந்திரா ரயிலில் வாசற்படியில் கயிறு கட்டிகொண்டு அமர்ந்து ஆபத்தான முறையில் அந்த காட்சியை படமாக்கினாராம்.
படத்திற்கு இசை இளையராஜா என்பது நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. கண்ணே கலைமானே, முன்ன ஒரு காலத்துல, பொன்மேனி உருகுதே, பூங்காற்று புதிதானது, வானில் எங்கும் என அனைத்து பாடல்களும் சிறப்புதான்.
#KamalHaasan #Sridevi #BaluMahendra
#Ilaiyaraaja #SathyaJyothiFilms #MoondramPirai