Newschannel39
539 views
அதிமுக-வின் கல்விச் சாதனைகளை விளக்கி, மாணவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்த வடசென்னை முகாம்! *"அரசியல் மேடையல்ல, இது மாணவர் உயர்வுக்கான ஏணி!" ஆர்.கே.நகரில் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்..!! சென்னை, பிப்.01:- ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 38-வது வட்டம் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் +2 படிப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.வினோத்குமார், முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வட்ட கழக செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், பி.கோவிந்தராஜ், வக்கீல் ஏ.வினாயகமூர்த்தி, எஸ்.நரேஷ்குமார், மரக்கடை விஜி, இபி.சேகர், செய்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரையின் முக்கிய கருத்துக்களானது மாணவர்கள் தங்கள் நேரத்தை நல்ல விஷயங்களுக்காக செலவிட வேண்டும். மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சியின் போது கொரோனா காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் கருதி முக்கியத்துவமாக மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகக் கூடாது என்பதற்காக 'ஆல் பாஸ்' திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு மூலம் தற்போது 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் அசுர வளர்ச்சிப்பெற்றது, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆட்சியிலும் தரமான 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்ததும் அண்ணா தி.மு.க. ஆட்சி தான் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு அதிமுக அரசு மேற்கொண்ட கல்விப் பணிகளை பாராட்டிப் பேசி . "மாணவச் செல்வங்கள் தவறான பாதையில் செல்லாமல், நல்ல விஷயங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையைத் தரமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்" என இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் கல்விக்கு ஆற்றிய புரட்சி வரலாற்று திரைப்பட தத்துவ பாடல்களை பாடி கலந்துறையாடினார். இந்த முகாமில் 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ-மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கமளித்தனர். கூட்டத்தில் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஊக்கத்தொகை, மற்றும் புரட்சித்தமிழரின் மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற வாசக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிரத்யோக ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் ஓன்றை வந்திருந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வழங்கி பரிசளித்தார். வெறும் அரசியல் மேடையாக இல்லாமல், மாணவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கலை, அறிவியல், வணிகம் மற்றும் சட்டப் படிப்புகள் (Arts, Science, Commerce, Law) குறித்த விழிப்புணர்வை இந்த முகாம் ஏற்படுத்தியது. இந்த வழிகாட்டுதல் முகாமில் தொழில்துறை, இன்ஜினியரிங், மருத்துவத்துறை, மற்றும் சட்டப்படிப்புத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் ஜெயகிருஷ்ணன், சௌமியா, மனீஷ், டில்லிபாபு, வழக்கறிஞர் டி.டீ.ஜனார்த்தனன், பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.முத்து செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சா.முகேஷ், தலைவர் பவழன், பகுதி துணை செயலாளர்கள் எஸ்.சுயம்பு, லயன் ஈ.சண்முகவினாயகம், மற்றும் பாசறைபாபு, கல்பனா, ப்ரியா, சங்கீதா, உதயா, விக்கி, நரேஷ், பாரத், உள்ளிட்ட பலர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக @அதிமுக தேனி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴