இல்லை இல்லையென்று
சொன்ன அத்தனைக் கனவுகளும்
இல்லாமல் போனாலும்
இருக்கிறது என்று
அவள் சொன்ன
அந்த ஒற்றைக் கனவு
இன்னும் தொடரட்டும்
முறிந்த காதலில்
நிஜங்கள் நிலைப்பதில்லை
கனவுகள்தான் ஆறுதலுக்கான
அன்னைமடி
அவளது தரிசனக் கனவுகள்
அலையடித்துப் பிரிந்த
பாய்மரப் படகின்
தூரத்து தரிசனம்
அழிந்துபோன காதல் கோலத்தின்
மீந்து நிற்கும் ஒற்றைப்புள்ளி
கனவில் அவள் வீசிய
ஒற்றைப் புன்னகை
அவளது குளிர்ப்பாதம்
தீண்டிய நினைவில்
தூங்கிய கனவில்
அன்றைக்குக்
கண் நிறைத்தது
அண்டார்டிகாவின்
பனிக் குன்றுகள்
❤️❤️❤️❤️❤️❤️❤️
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #✍️கவிதை📜 #💖காதல் கவிதைகள்✍️ #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள்