#🤲இஸ்லாமிய துஆ #allah #Muslim Bayan #dua #quran حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ.
மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகச் செய்வது போன்று உளூச் செய்தார்கள்; ஆனால் தங்கள் பாதங்களைக் கழுவவில்லை. தங்கள் மர்ம உறுப்பையும், அதில் பட்டிருந்த அசுத்தத்தையும் கழுவினார்கள். பிறகு தங்கள் உடல் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டார்கள். பிறகு தங்கள் பாதங்களை நகர்த்தி, அவற்றைக் கழுவினார்கள். இதுவே அவர்களின் ஜனாபத் குளியல் முறையாக இருந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 249