பழைய பேப்பர்!
2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான வாக்குறுதி செல்போன். ’அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. அதிமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை பத்திரிகைகளில் இரண்டு பக்க அளவுக்கு வெளியிட்ட போது அதில் செல்போன் அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. அம்மா கைப்பேசி என புத்தம் புதிய இரண்டு செல்போன்களின் படத்தையெல்லாம் வெளியிட்டு பிரசாரம் செய்து வெற்றியும் பெற்றார்கள். ஆட்சிக்கு வந்த அதிமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2016 முதல் 2021 வரை ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று முதலமைச்சர்களாக மாறினார்களே தவிர கடைசி வரை யாருக்கும் செல்போன் வழங்கவில்லை.
#அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்