B. CELLIN
738 views
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இரவு ஜெபம்* நாள்தோறும் உமது பேரன்பை, எங்கள் மீது பொழிகின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! இன்றைய நாள்முழுவதும் உமது பேரன்பை எங்கள் மீது தாராளமாக பொழிந்து, எங்களுடைய வேலை, பயணம் போன்ற எல்லாவித சூழ்நிலையிலும்; எந்த ஒரு தீயசக்திகளும், பாவச்செயல்களும் எங்களை நெருங்காமல் பாதுகாத்து, உமது ஒளியின் பாதையிலே எங்களை வழிநடத்தியதற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த நாள் முழுவதும், நாங்கள் உம் ஆசீர்வாதத்தை பெற, உம் வல்லமையால் எங்கள் வாழ்வையும், எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்தீரே உமக்கு நன்றி ஆண்டவரே. அன்னை மரியாளின் பரிந்துரையும், அன்னை மரியாளின் ஆசிர்வாதமும்.. எங்கள் வாழ்வையும், எங்கள் குடும்பங்களையும் உயர்த்தட்டும் அப்பா. உமது ஆற்றலின் கரம் எங்களோடு இருந்து செயல்பட்டதற்காக நன்றி இயேசுவே. அன்பு இறைவா! இந்த இரவு வேளையில் உமது பேரன்பை எங்கள்மீது பொழிந்து, அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை தந்து; அதிகாலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். - ஆமென் *நன்றி இயேசுவே* *நன்றி ஆன்டவரே* *மரியே வாழ்க*