*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
03.02.2026 *(செவ்வாய்)*
*⚜️துயர்நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 86:2-ல்,
*"என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்."* எனக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எண்ணற்ற நோயாளிகளின் உயிரைக் காத்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வை இறைவன் அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 86:3-ல்,
*"என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்."* என கூறப்பட்டுள்ளது.
தங்களது வாழ்வில் ஆண்டவரின் இரக்கப் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் மன்றாட்டுகளுக்கு இறைவன் செவிமடுத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து*
இன்றையத் திருப்பலி நற்செய்தியில், யாயிர் என்பவர் *"அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்."* என்பதை வாசித்தோம்.
உயிருக்குப் போராடும் மக்களை இறைவன் தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,*
உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்தியவரும், ஆன்மாக்களின் மருத்துவரும், தொண்டையில் சிக்கும் பொருள்களை நீக்கி சுகமளிப்பதில் வல்லவரும், மறைசாட்சியாக மரித்தவருமான இன்றைய புனிதர் பிளெய்ஸை திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக
இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,*
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள்