#🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
சமீபத்தில் பத்திரிக்கையாளர் நண்பர் டிவி சோமு அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை அம்பலப்படுத்தியிருந்தார்.
TVK வின் கூட்டங்களுக்கு அவர்கள் 4998 பேருக்கு என்று 5000க்கு ஒன்று இரண்டு குறைவாக போட்டு தான் அனுமதி வாங்குகிறார்கள்.
ஏன் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், புதிய விதிமுறைகளின் படி 5000 பேருக்கு மேல் கலந்துகொண்டால், கலந்துகொண்ட ரசிகர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்த இழப்பீடு கொடுப்பதில் இருந்து தப்பிப்பதற்காக தான் TVK தொடர்ந்து 5000 பேருக்கு கீழ் குறிப்பிட்டு அனுமதி வாங்குகிறது.
விஜயை உயிரினும் மேலாக மதிக்கும் ரசிகர்கள் தான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு, தான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஏதேனும் நடந்தால், இழப்பீடு வழங்குவதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இப்படி கீழ்த்தரமான உத்தியை கடைபிடிக்கிறார் என்றால், இவர் நாட்டின் மீதும், ரசிகர்களின் மீதும், மக்களின் மீதும் துளியும் அக்கறை இல்லாதவர் என்பதை தாண்டி, இதயத்தில் துளியும் மனிதநேயமே இல்லாத மிருகம் என்னும் முடிவுக்கு தான் வரவேண்டியிருக்கிறது..!!