ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.6K views
காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வார்டுகளிலுள்ள பெண்கள், பொதுமக்கள் இணைத்து வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை ஏற்படுத்தி, அதில் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், 'ஒரு பவுன் ரூ. 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பாதுகாப்பின்றி நகை அணிந்து வந்தால் டூவீலரில் வந்து பறித்துக்கொள்வர். அதிகாலை 5.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் இரு இடத்தில் நகைப் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. நகை விற்கும் விலைக்கு பாதுகாப்பாக வையுங்கள். முடிந்தளவு பெண்கள் தங்க நகைகளை அணிவதை தவிர்க்கலாம். இதற்கு பதில் கவரிங், பாசிகளை போடுங்கள். வெளியூர் சென்றால் வீட்டிலுள்ள பணம் நகைகளை வங்கி லாக்கரில் வையுங்கள். காவல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள். வர்த்தகர்கள் கடை கல்லா பெட்டியில் பணம் வைக்கக் கூடாது. நம்பர் பிளேட் இன்றி டூவீலர்களில் வலம் வரும் கொள்ளையர்கள், குறிப்பாக வாக்கிங், வாசலில் கோலமிடும், கடைக்கு செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிக்கின்றனர். நகைப் பறிப்பு நடந்துவிட்டால் கண்டுபிடிப்பது கடினம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடு, வர்த்தக நிறுவனங்களில் பணியிலுள்ள காவலாளிகள் விசில் வாங்கி கொடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை விசில் ஊத அறிவுறுத்தாலும், சில இடங்களிலுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாததால் குற்றச் செயல்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது. மரங்கள், போஸ்டரால் கேமராக்கள் மறைக்கப்படுகிறது. எவ்வித தகவலாக இருந்தாலும் போலீஸுக்கு தகவல் தெரிவியுங்கள். காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார். குற்றச் செயல்களை தடுக்க, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆய்வாளர் கிரேசி சோபியா வெளியிட்ட இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #📢 பிப்ரவரி 11 முக்கிய தகவல் 🤗 #பெண்களின் பாதுகாப்பு