Senthilvel Achari
730 views
திண்டுக்கல் வீட்டில் ஆசிரியை தீபிகா.. ரோட்டில் கணவன்... அடுத்தடுத்து ஆடிப்போக வைத்த சம்பவம். திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ், இவருடைய மனைவி ஞான தீபிகா . இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியை சேர்ந்த 41 வயதாகும் சேசுராஜ் என்பவர் மீன் வியாபாரி ஆவார். இவருடைய மனைவி ஞான தீபிகாவுக்கு 30 வயது ஆகிறது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சேசுராஜ் நேற்று இரவு 7.15 மணியளவில் திண்டுக்கல்- நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. நகர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் சேசுராஜ் வந்த இருசக்கர வாகனத்தை மறித்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்துக்குள் அவரை பெரிய வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் . கீழே சரிந்த சேசுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேசுராஜை கொலை செய்த பின்னர் அந்த மர்ம கும்பல் நேராக அவருடைய வீட்டுக்கு சென்று சேசுராஜின் மனைவி ஞான தீபிகாவையும் சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். அப்போது அவருடைய மகன் அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரையும் வெட்டினர். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஞான தீபிகாவை மீண்டும் வாளால் வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பிச்சென்றனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவரும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் நடத்திய விசாரணை நடத்தினார்கள். #😱கணவன், மனைவி பயங்கர படுக்கொலை🔪 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #breaking news #📝இன்றைய செய்தி📡