arukanimembers
476 views
"நகையை திரும்ப கேட்டு பெண் உறவினர்களுடன் நகை கடை முன்பு தர்ணா போராட்டம்" * மார்த்தாண்டம் (பிப்- 11) : தொலையாவட்டம் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் அனிதா, * இவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது மகளுக்கு திருமணத்திற்கான நகைகளை செய்வதற்கு மார்த்தாண்டம் அருகே ஞாறம்விளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நகைக்கடையில் 26 பவுன் மதிப்பிலான நகை செய்வதற்கான முழு பணத்தையும் செலுத்தி உள்ளதாகவும், * முழு பணத்தையும் செலுத்தி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் கடையின் உரிமையாளர்களான சுஜித் மற்றும் சுதர் ஆகியோர் இதுவரையில் வெறும் 3 பவுன் நகையை மட்டுமே அனிதாவிற்கு திரும்ப அளித்துள்ளதாகவும், * மீதமுள்ள 23 பவுன் நகையை கொடுக்காமல் சாக்குப் போக்கு சொல்லி காலம் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. * இதுகுறித்து பாதிக்கப்பட்டவரான அனிதா காவல்துறையில் புகார் அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லை எனவே, * அனிதா தனது உறவினர்களுடன் இன்று நகையை திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வரும் நகைக்கடையின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறதாக கூறுகின்றனர் * இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்