#கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரை பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் N.சேட்டு, C.சண்முகம் ஆகியோர் வரவேற்பில் கீரனூர் அய்யப்பன் கோவில் அருகில் கலைஞர் திடலில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் கழக விவசாய அணி செயலாளருமான AKS.விஜயன் அவர்கள் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள் எடுத்துரைத்து எழுச்சியுரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மு.மணவழகன், கழக இளம் பேச்சாளர் சொ.தமிழினியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநில விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் KRN.போஸ், ஒன்றிய செயலாளர்கள் M.பரமசிவம், வெ.முத்துக்கிருஷ்ணன், RRS.மாரிமுத்து, மா.தமிழய்யா, RR.சாமிநாதன், கறம்பக்குடி பேரூர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ.முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை. தமிழ் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் R.செல்லத்துரை உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய வட்ட கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய செயலாளர் OS.வெங்கடாசலம், கீரனூர் பேரூர் செயலாளர் P.அண்ணாதுரை ஆகியோர் நன்றியுரையாற்றினார்கள்.